முஸ்லிம்களின் நூல் நிலையங்கள்
மனிதனிடம் எதையும் சிந்திக்கும் சிந்தனா சக்தி உண்டு. பகுத்தறிவற்ற விலங்கினங்களுக்கு அந்த சக்தி இல்லை. இது கடவுள் நியதி. மனிதன் பாரில் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடைய சிந்தனா சக்தி காலத்திற்குக் காலம் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த சிந்தனா சக்தியின் மேன்மையிற்றான் இன்று றஷியர்கள் சந்திர மண்டலத்தில் கூட தங்கள் நாட்டின் சின்னத்தைப் பொறித்துள்ளார்கள்.