- சுதந்திரமற்று வாழ்பவர் - அடிமை
- அரண்மனையில் பெண்கள் வசிக்குமிடம் - அந்தப்புரம்
- ஒரு நூலுக்கு நூலாசிரியர் தவிர்ந்த பிறரால் வழங்கப்படும் உரை - அணிந்துரை
- அகர வரிசையில் சொற்களுக்குப் பொருள் கூறுவது - அகராதி
- தாய், தந்தையை இழந்தவன் - அநாதை
- முனிவர்கள் வாழுமிடம் - ஆச்சிரமம்
- ஆடு மேய்ப்பவன் - இடையன்
- தானும் உண்ணாமல் பிறருக்கும் கொடுக்காமல் இருப்பவன் - உலோபி
- வீண் செலவு செய்பவன் - ஊதாரி
- அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் ஆகியோர் - ஐங்குரவர்
- மட்பாண்ட வேலையைச் செய்பவன் - குயவன்
- கட்டட வேலை செய்பவன் - கொத்தன்
- சிறைத் தண்டனை பெற்றவன் - கைதி
- ஒருவர் அல்லது ஒரு பொருள் தானே தன் கதையைச் சொல்லுதல் - சுயசரிதை
- மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லாதவன் - சுயநலவாதி
- மனைவியை இழந்தவன் - தபுதாரன்
- மரவேலை செய்பவன் - தச்சன்
- நடக்க இருப்பவற்றை முன்கூட்டியே கூறுபவன் - தீர்க்கதரிசி
- விசாரணை முடிவில் நீதிபதியால் வழங்கப்படுவது - தீர்ப்பு
- பேருந்து பயணச் சீட்டு வழங்குபவர் - நடத்துநர்
- கடவுள் இல்லை என்று வாதிடுபவன் - நாத்திகன்
- ஒன்றுபோல் இருக்கும் மற்றொன்று - போலி
- நூலாசிரியர் தாம் இயற்றிய நூலைப் பற்றிக் கூறும் உரை - முன்னுரை
- கணவனை இழந்தவள் - விதவை / கைம்பெண்
- தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவன் - வேட்பாளன்
- விலங்குகளை வேட்டையாடுபவன் - வேடன்
- ஒருவர் தன் உருவத்தை மாற்றிக் கொள்வது - வேடம்
- பகையுமின்று நட்புமின்றி நடுநிலையில் நிற்போர் - நொதுமலாளர்
- கடலும் வானமும் ஒன்றையொன்று தொடுவது போன்றது - தொடுவானம்
- நம்ப முடியாத கதை - கட்டுக்கதை
- அரசர்க்கெல்லாம் அரசன் - சக்கரவர்த்தி
- ஒரு நூலை வௌியிடுவோர் அந்நூலைப் பற்றிக் கூறும் உரை - பதிப்புரை
- பிறர் தன்னை இன்னாரென்று அறியாத வண்ணம் மக்கள் மத்தியில் வாழ்தல் - அஞ்ஞாதவாசம்
- மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன - ஐம்பொறிகள்
- சுவை, ஔி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன - ஐம்புலன்கள்
- வௌிப்படைப் பொருளில் புகழ்ந்தும் மறை பொருளில் இகழ்ந்தும் கூறுவது - அங்கதம்
- யார் துணையுமின்றித் தானே தனித்து நின்று பகைவரை வெல்லும் திறன் படைத்தோன் - அசகாயசூரன்
- ஒரே சமயத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன் - அட்டாவதானி
- மாலையில் அல்லது இரவில் கூடும் சந்தை - அல்லங்காடி
- அறிஞர் பலர் கூடிய சபை நடுவே புதிதாய் ஆக்கப்பட்ட நூல் ஒன்றைப் படித்து, அச்சபை ஏற்றுக் கொள்ளச் செய்தல் - அரங்கேற்றம்
- உப்பின்றிச் சமைத்த பச்சையரிசிச் சாதம் - அவிசு
- பிறருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சொற்களையும் சொற்றொடர்களையும் சேர்த்துக் கவி பாடுதல் - அறம்பாடுதல்
- தபோதனர் வசிக்கும் இடம் - ஆச்சிரமம்
- கடவுள் இருக்கிறார் என நம்புபவன் - ஆத்திகன்
- வறியவர்க்கும் அங்கவீனர்க்கும் முதியோர்க்கும் உண்டியும் உறையுளும் அளித்து ஆதரிக்கும் இடம் - ஆதுலர்சாலை
- நிலத்தின் உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துருவில் அமைந்த உறுதி - ஆவணம்
- சபையில் சொல்லத் தகாத சொல்லை வேறொரு வாய்ப்பாட்டால் சொல்வது - இடக்கரடக்கல்
- உலகமும் உலகவின்பங்களும் மாத்திரமே மெய்யென்றும், கடவுளோ மறுமையோ இல்லையென்றும் வாதிடுபவன் - உலோகாயதன்
- பிற்காலத் தேவைக்காகச் சேமித்துப் பாதுகாக்கப்படும் பொருள் - எய்ப்பில் வைப்பு
- தனக்கே உரிமையாக முழுப் பொருளையும் அனுபவித்தல் - ஏகபோகம்
- கலை நிகழ்ச்சிகளை மேடையேற்றுவதற்கு முன்னர் சரி பிழை பார்த்துத் திருத்தும் நிகழ்ச்சி - ஒத்திகை
- உலக நடை அறிந்து ஒழுகுதல் - ஒப்புரவு
- சொத்தை அனுபவிக்கும் உரிமையுடன் கூடிய அடைமானம் - ஒற்றி
- பேணிப் பாதுகாத்துத் தருமாறு ஒருவரை இன்னொருவரிடம் ஒப்படைத்தல் - ஓம்படை
- அரசனுடைய சபா மண்டபத்தில் அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலிய பரிவாரத்தினர் சூழ இருக்கும் இருக்கை - ஓலக்கம்
- அரசன் எழுந்தருளும்போது அவனது விருதுப் பெயர், வெற்றி முதலியவற்றைக் கூறல் - கட்டியம்
- பகையரசருக்குக் கொடுக்கும் திறைப் பொருள் - கப்பம்
- ஒருவர் முதன் முதலில் இயற்றிய பாடல் - கன்னிக் கவிதை
- அரச குமாரன் காட்டிற் சென்று முதன் முதல் நிகழ்த்தும் வேட்டை - கன்னி வேட்டை
- கோட்டையைச் சூழ்ந்து அரணாய் அமைந்துள்ள பெருங்காடு - காவற்காடு
- அரசன், உபாத்தியாயன் (ஆசிரியன்), தாய், தந்தை, தமையன் என்போர் - ஐங்குரவர்
நீண்ட பல தொடரால் உணர்த்தும் பொருளை ஒரு சொல்லைப் பயன்படுத்தி, உணர்த்துவது மொழி நடைக்கு ஆற்றலும் வனப்பும் அளிக்கும். மேலும், அத்தகைய சொற்களின் அறிவு பொருட் சுருக்கம் எழுதும்போது மிகுந்த பயனளிக்கும்.
பகுதி 2 இன் இணைப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
Tamil grammar | Thodar mozhikku Oru Mozhi | Thodar molikku oru moli | Thamilsh Shudar
---------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக