- சுதந்திரமற்று வாழ்பவர் - அடிமை
- அரண்மனையில் பெண்கள் வசிக்குமிடம் - அந்தப்புரம்
- ஒரு நூலுக்கு நூலாசிரியர் தவிர்ந்த பிறரால் வழங்கப்படும் உரை - அணிந்துரை
- அகர வரிசையில் சொற்களுக்குப் பொருள் கூறுவது - அகராதி
- தாய், தந்தையை இழந்தவன் - அநாதை
- முனிவர்கள் வாழுமிடம் - ஆச்சிரமம்
- ஆடு மேய்ப்பவன் - இடையன்
- தானும் உண்ணாமல் பிறருக்கும் கொடுக்காமல் இருப்பவன் - உலோபி
- வீண் செலவு செய்பவன் - ஊதாரி
- அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் ஆகியோர் - ஐங்குரவர்
- மட்பாண்ட வேலையைச் செய்பவன் - குயவன்
- கட்டட வேலை செய்பவன் - கொத்தன்
- சிறைத் தண்டனை பெற்றவன் - கைதி
- ஒருவர் அல்லது ஒரு பொருள் தானே தன் கதையைச் சொல்லுதல் - சுயசரிதை
- மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லாதவன் - சுயநலவாதி
- மனைவியை இழந்தவன் - தபுதாரன்
- மரவேலை செய்பவன் - தச்சன்
- நடக்க இருப்பவற்றை முன்கூட்டியே கூறுபவன் - தீர்க்கதரிசி
- விசாரணை முடிவில் நீதிபதியால் வழங்கப்படுவது - தீர்ப்பு
- பேருந்து பயணச் சீட்டு வழங்குபவர் - நடத்துநர்
- கடவுள் இல்லை என்று வாதிடுபவன் - நாத்திகன்
- ஒன்றுபோல் இருக்கும் மற்றொன்று - போலி
- நூலாசிரியர் தாம் இயற்றிய நூலைப் பற்றிக் கூறும் உரை - முன்னுரை
- கணவனை இழந்தவள் - விதவை / கைம்பெண்
- தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவன் - வேட்பாளன்
- விலங்குகளை வேட்டையாடுபவன் - வேடன்
- ஒருவர் தன் உருவத்தை மாற்றிக் கொள்வது - வேடம்
- பகையுமின்று நட்புமின்றி நடுநிலையில் நிற்போர் - நொதுமலாளர்
- கடலும் வானமும் ஒன்றையொன்று தொடுவது போன்றது - தொடுவானம்
- நம்ப முடியாத கதை - கட்டுக்கதை
- அரசர்க்கெல்லாம் அரசன் - சக்கரவர்த்தி
- ஒரு நூலை வௌியிடுவோர் அந்நூலைப் பற்றிக் கூறும் உரை - பதிப்புரை
- பிறர் தன்னை இன்னாரென்று அறியாத வண்ணம் மக்கள் மத்தியில் வாழ்தல் - அஞ்ஞாதவாசம்
- மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன - ஐம்பொறிகள்
- சுவை, ஔி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன - ஐம்புலன்கள்
பகுதி 2 இன் இணைப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
Tamil grammar | Thodar mozhikku Oru Mozhi | Thodar molikku oru moli | Thamilsh Shudar
---------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக