ஈழத்து இலக்கியத்திற்கு வழிகாட்டிய இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் 127வது பிறந்ததினம் இன்று. அதனை முன்னிட்டு இந்தக் கட்டுரை பிரசுரமாகின்றது.
பண்டிதமணி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி மற்றும் தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர்,


