📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 6 ஜூன், 2026

புலம்பெயர் தமிழர்களும் அடுத்த தலைமுறையும் | கலைமகன் பைரூஸ்

புலம்பெயர் தமிழர்களும் அடுத்த தலைமுறையும்: அந்நிய மண்ணில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வளர்ப்பது எப்படி?

இன்று உலகெங்கிலும் பரவி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் சூழல் காரணமாக கனடா, லண்டன், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளில் மில்லியன் கணக்கான தமிழர்கள் குடியேறியுள்ளனர்.

அந்நிய மண்ணில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் புலம்பெயர் தமிழர்கள் (Tamil Diaspora) பெரும் சாதனைகளைத் படைத்து வந்தாலும், அவர்களின் நெஞ்சுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு மிகப்பெரிய கவலை:

வெள்ளி, 5 ஜூன், 2026

தமிழில் இணைமொழிகளின் பயன்பாடு...

 இணைமொழிகள் ஓர் விளக்கம்

முன்னுரை: 

உலகச் செம்மொழிகளுக்கெல்லாம் தாயாய் விளங்கும் நம் தமிழ் மொழி, சொற்செறிவும் பொருளாழமும் மிக்கது. ஒரு கருத்தை சாதாரண சொற்களால் கூறுவதை விட, அழகிய சொற்களைக் கொண்டு நயம்படக் கூறுவது தமிழரின் மரபு. அவ்வாறு தமிழின் உரைநடைக்கும் பேச்சுவடைக்கும் கூடுதல் அழகையும், அழுத்தத்தையும் தரும் உன்னதமான மொழிப்பயன்பாடே 'இணைமொழிகள்' ஆகும். 

கம்பராமாயணம் - காண்டங்கள் சிறு அறிமுகம்

முன்னுரை: 

தமிழ் இலக்கிய உலகில் ‘கல்வியிற் பெரியன் கம்பன்’ என்று போற்றப்படும் மகா கவி கம்பன் இயற்றிய மாபெரும் காப்பியம் கம்பராமாயணம் ஆகும். வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டாலும், தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்புகளுடனும் நிகரற்ற கவித்துவத்துடனும் இதனை ஒரு வழிநூலாக

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

கற்றதைப் பகிர்கிறேன்...| ஆங்கிலம் | English - 1

அன்றாடப் பயன்பாட்டிற்குப் பயன்படுபவை (Daily Greetings & Basics)

1. How's it going? – எப்படிப் போகிறது? (How are you கூடுதலாகப் பயன்படுகிறது).

2. Long time no see! – அதிக நாட்களாக உங்களைக் காணவே இல்லையே!

3. What's up? – என்னதான் நடக்கிறது?

4. Can’t complain. – பிரச்சினை இல்லை / நன்றாக இருக்கிறேன். 

5. How do you know? – அதைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

புறத்திணைகள் பற்றி அறிந்து கொள்வோம் | கலைமகன் பைரூஸ்

தமிழ் இலக்கியத்தில் புறத்திணைகள் என்பது சங்க இலக்கியத்தின் ஒரு முக்கிய கூறாகும். இவை மனித வாழ்க்கையின் புறநிலைச் செயல்கள், குறிப்பாக போரியல், புகழ், தானம், வீரத் தன்மை, அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. இக்கட்டுரையில் புறத்திணைகளின் தன்மை, வகைகள் மற்றும் அவற்றின் இலக்கியப் பெருமை குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

🟣 புறத்திணை என்றால் என்ன?

புதன், 1 ஏப்ரல், 2026

தொகைச் சொற்கள் | தமிழ்ச்சுடர்

 இருதிணை - உயர்திணை, அஃறிணை

இருசுடர் - சூரியன், சந்திரன்

முத்தமிழ் - இயல், இசை, நாடகம்

முந்நீர் - ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்

முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்

ஞாயிறு, 29 மார்ச், 2026

நேர முகாமைத்துவத்தில் நன்றை இன்றே செய்வது…. | KAMILA FARIS, SLPS.

மனித வாழ்க்கையில் வெற்றியும் முன்னேற்றமும் அடைவதற்கான முக்கியமான திறன்களில் ஒன்றாக நேர முகாமைத்துவம் (Time Management) கருதப்படுகிறது. இத்திறனின் மையத்தில் “நன்றை இன்றே செய்க” என்ற சிந்தனை வலுவாகப் பதிந்துள்ளது. ஒரு செயலைத் தாமதிக்காமல் சரியான நேரத்தில் நிறைவேற்றுவது, தனிநபரின் வளர்ச்சிக்கும் கல்வி

வியாழன், 26 பிப்ரவரி, 2026

வெண்பாக்களில் அமைந்த நூல்களிற் சில

 தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் “பா” வகைகள் மிகுந்த சிறப்பும் செம்மையும் உடையவை. அவற்றில் முக்கியமான நான்கு வகைகள் வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா ஆகும். இவ்வகைகள் செய்யுளின் ஓசை, அடிக்குறிப்பு, எதுகை, மோனை, இயைபு போன்ற இலக்கணச் சிறப்புகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன. அவற்றுள் வெண்பா மிகச் செம்மையான

திங்கள், 23 பிப்ரவரி, 2026

தமிழறிவு வினா - விடை | தமிழ்மொழித் தின விழா

  1.  சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்? 96 வகை
  2. சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 வகை என வகைப்படுத்திய நூல் எது? சதுரகராதி
  3. பரணி என்பது யாது? 'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி' - அதாவது, போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது.
  4. தமிழின் முதல் பரணி நூல் எது? கலிங்கத்துப் பரணி.
  5. கலிங்கத்துப் பரணி எனும் நூலை எழுதியவர் யார்? செயங்கொண்டார் 

சில பாக்களும் பா வகைளும்

தமிழ் இலக்கியங்கள் – பா வகை அட்டவணை
எண்இலக்கியம்பா வகை
1மெய்க்கீர்த்திஆசிரியப்பா
2ஞானம்ஆசிரியப்பா
3காலக்கணிதம்ஆசிரியப்பா
4சிலப்பதிகாரம்ஆசிரியப்பா
5ஏர் புதிதாஆசிரியப்பா

சனி, 21 பிப்ரவரி, 2026

உன்னொளி பரவட்டும் அகிலத்திலென்றும்!

தாய்த்தமிழே! உனைப்போல் சிறப்பெங்குளதோ?
தாயின் துதிக்குரல் தாளமிடும் நாதமே!
என்னுயிரினுள் கலந்து எழும் இனிமை நீயே;
இறையருள் பொழியும் இன்பமதும் நீயே!

புதன், 18 பிப்ரவரி, 2026

பழிவாங்கும் பராசக்தி

 அரசர் நிற்க, அறம் உறங்க — என் ஆவி எரிகின்றதே!

அவமதி செய்த கை ஓயும்நாள் அருகென்பதே திண்ணம்!

கூந்தல் சுருட்டேன் — கொதிநீராய் இரத்தம் ஓடும்வரை!

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

இந்த வினா(விடை)ப்பத்திரத்தின் மாணவனுக்கு யார் பொறுப்புச் சொல்ல வேண்டும்?

தாய்ப்பால் சரியாகக் கொடுக்கப்படவில்லை போலும்…”

இந்த வினாப்பத்திரத்தைக் வாசித்தவுடனே என் உள்ளத்தில் எழுந்த வலி —
அதே உணர்வு உங்களிடமும் எழும் என நம்புகிறேன்.

எதிர்பாராத விதமாக ஒரு ஐந்தாம் தர மாணவனின் தாய்மொழி வினா(விடை)ப்பத்திரம் என் கரங்களில் கிட்டியது.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான GK | பொது அறிவு வினாக்கள்


  1. NVQ (என்வீக்யூ) என்பதனை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு - அவுஸ்திரேலியா
  2. அதிகமான பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடு - இந்தியா
  3. அதிக பாடசாலைகள் காணப்படும் நாடு  - இந்தியா
  4. அடிப்படை உரிமைகளை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு - அமெரிக்கா

சனி, 14 பிப்ரவரி, 2026

கருத்தரங்கு வினாப்பத்திரம் | தமிழ்மொழியும் இலக்கியமும் - பகுதி III

எதிர்வரும் 2026.02.17 ஆம் திகதி க.பொ.த (சா.த) 2025 (2026) பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. நேரசூசியின்படி, 2026.02.18 ஆம் திகதி தமிழ் மொழியும் இலக்கியமும் பரீட்சை நடைபெறவுள்ளது. 

பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.