📚 பாரதிதாசனின் 'புத்தகசாலை' விரிவான விளக்கம்
மாணாக்கர்களுக்கும், தமிழன்புள்ளோர் மனதுக்கும் நெருக்கமாக இருப்பது போன்ற முறையில், பாரதிதாசனின் 'புத்தகசாலை' என்னும் கவிதையை இங்கு விரிவாக நம் பார்வைக்கு எடுத்துரைக்கப்போகிகிறேன்.
தமிழ்மொழி சார்ந்த ஆக்க இலக்கியங்களை எனது பாணியில் – எனது சிந்தனைகளை கலந்தழகு செய்து வழங்கி தமிழுக்கு அணிசெய்து வருவேன். தொடருங்கள், தமிழின் ஒளிக்கதிர்கள் உங்கள் உள்ளத்தில் பரவட்டும்!
- தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
📝 முதலில் கவிதையைப் பார்ப்போம்…
தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளைதன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!