நீதிப்பாடல்கள்
குறு வினாக்கள்
* 'தண்டாமரையி னுடன் பிறந்தும் தண்டேன்
நுகரா மண்டுகம்...'
01) மேற்படி செய்யுள் இடம்பெறும் நூல் எது?
* விவேக சிந்தாமணி
02) விவேக சிந்தாமணி எக்காலத்திற்குரிய நூலாகும்?
* விஜய நாயக்கர் காலம் (எனக் கருதப்படுகிறது.)
03) 'மண்டுகம்' எனப்படுவது யாது?
* தவளை
04) மண்டுகம் யாருக்கு உவமிக்கப்பட்டுள்ளது?
* புல்லருக்கு (அறிவில்லாதவருக்கு)
05) இங்கு இடம்பெற்றுள்ள அணி யாது? விளக்குக.
* உவமை அணி
* உவமானம் - மண்டுகம்
* உவமேயம் - அறிவற்றவர்
* பொதுத்தன்மை - அறியாமை
06 மண்டுகத்தின் இயல்பு யாது?
* தாமரையுடன் வாழ்ந்தும் அம் மலரில் உள்ள தேனைக் குடிக்கவியலாத அறியாமை கொண்டிருத்தல்
* வண்டோ கானத்திடை யிருந்து வந்து
கமல மதுவுண்ணும்"
07) கானம் எனப்படுவது யாது?
* காடு
08) கமலம், மது எனப்படுபவை யாவை?
* தாமரை, தேன்
09) வண்டு யாருக்கு உவமிக்கப்பட்டுள்ளது?
* அறிவுடையாருக்கு
10) வண்டின் இயல்பு யாது?
* காட்டில் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து, அங்கிருந்து வந்து தாமரையின் தேனை உண்ணக்கூடிய அறிவுடைமையைக் கொண்டிருத்தல்.
* பண்டே பழகியிருந்தாலும் -அறியார்
புல்லர் நல்லோரை'
11) புல்லர் என்பதன் பொருள் யாது?
* அறிவில்லாதவர்
* தேம்படு பனையின் றிரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
12) மேற்படி பாடல்வரி இடம்பெறுகின்ற இலக்கியம் எது?
* வெற்றி வேற்கை
13) வெற்றிவேற்கை வேறு எப்பெயரினால் அழைக்கப்படுகிறது?
* நறுந்தொகை
14) 'நறுந்தொகை' என அழைக்கப்படுவதன் காரணம் யாது?
* நல்ல நீதிகளை எல்லாம் தொகுத்துத் தருவதால் 'நறுந்தொகை' என்று அழைக்கப்படுகிறது.
15) இந்நூலின் ஆசிரியர் யார்?
* அதிவீரராம பாண்டியன்
16) 'வானுறவோங்கி வளம்பெற வளரினும்' எனும் தொடரில் கையாளப்பட்டுள்ள அணி யாது? விளக்குக.
* உயர்வு நவிற்சியணி
* பனை மரமானது வானத்தை நோக்கி மிக உயர்ந்து வளர்ந்திருப்பதாக, அதன் உயர வளரும் தன்மை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.
17) பனை மரத்தின் இயல்பு யாது?
* பெரிய விதையிலிருந்து முளைத்து வளர்ந்திருந்தாலும் ஒருவருக்கு நிழல் கொடுத்து உதவாது.
18) இப்பாடலில் குறிப்பிடப்படும் இரு மரங்களும் எவை?
* பனைமரம், ஆலமரம்
*தௌ்ளியவாலின் சிறுபழத்தொரு விதை
தெண்ணீர்க் கயத்துட் சிறுமீன் சினையினும் நுண்ணிதே'
19) கயம், சினை எனப்படுபவை யாவை?
* குளம், முட்டை
20) 'தௌ்ளியவாலின்' எனும் தொடரின் பொருள் யாது?
* தௌிவாகத் தெரிகின்ற ஆல மரம்
21) சிறுபழத்தொரு விதை எதனிலும் நுண்ணியதாகக் குறிப்பிடப்படுகின்றது?
* சிறுமீன் முட்டையிலும் நுண்ணியதாக
22) 'கயம்' என்பதன் பொருள் யாது?
* குளம்
23) பெரு நிழலைத் தருவதாகக் கூறப்படும் மரம் எது?
* ஆல மரம்
24) ஆலின் சிறிய விதை யாருக்கு உவமிக்கப்படுகிறது?
* உருவில் சிறியவர்களுக்கு
25) பனம் பழ விதை யாருக்கு உவமிக்கப்பட்டுள்ளது?
* உருவில் பெரியவர்களுக்கு
26) 'ஆட்பெரும் படையொடு மன்னர்க்கிருக்க நிழலாகுமே' - இதில் வரும் அணி யாது? விளக்குக.
* உயர்வு நவிற்சியணி
* இங்கு ஆல மர நிழலில் மன்னரும் அவருடைய நாற்படைகளும் இருக்கலாம் என, அந்தப் பரந்த நிழல் கொடுக்கும் தன்மை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.
'அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா'
27) இப்பாடல் இடம்பெறுகின்ற நூல் எது?
* வாக்குண்டாம்
28) 'வாக்குண்டாம்' என்ற நூலை எழுதியவர் யார்?
* ஔவையார்
29) இந்நூல் எத்தனை பாடல்களைக் கொண்டமைந்துள்ளது?
* 30 பாடல்கள்
30) ஔவையாரால் எழுதப்பட்ட வேறு நூல்கள் மூன்றினைக் குறிப்பிடுக.
* ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன்
'மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன்
வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு'
31) 'மடைத்தலை', 'உறுமீன்' எனும் தொடர்களின் பொருள்களைத் தருக.
* மடைத்தலை - நீரோடும் வாய்க்கால், உறுமீன் - பெரிய மீன்
32) கொக்கின் இயல்பு யாது?
* ஓடுகின்ற சிறிய மீன்களை ஓடவிட்டு, தனக்கேற்ற பெரிய மீன்கள் வரும்வரை வாட்டத்துடன் காத்திருத்தல்.
33) வாட்டத்துடன் இருக்கும் கொக்கு யாருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது?
* பொறுமையுடையவருக்கு / அறிவுடையவருக்கு
'கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கு'
34) இப்பாடல் இடம்பெறுகின்ற நூல் யாது?
* திரிகடுகம்
35) திரிகடுகங்களும் எவை?
* சுக்கு, மிளகு, திப்பிலி
36) 'திரிகடுகம்' என்ற நூலை இயற்றியவர் யார்?
* நல்லாதனார்
37) 'கணக்காயர்' எனப்படுபவர் யார்?
* ஆசிரியர் / ஓதுவிப்பவர்
38) இந்நூல் எத்தனை பாடல்களைக் கொண்டமைந்துள்ளது?
* 101 பாடல்கள்
39) 'திரிகடுகம்' எப்பா அமைப்பினைக் கொண்டமைந்துள்ளது?
* 'திரிகடுகம்' வெண்பா யாப்பினால் ஆனது.
40) 'பாத்துண்ணும்' எனும் தொடரின் பொருள் யாது?
* பகிர்ந்து உண்ணும்
41) எப்படிப்பட்ட அவைக்களன் நன்மை தராது?
* மனிதர்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை அகற்றும் அறிவும், அனுபவமும் மிக்க பெரியவர்களைக் கொண்டிராத அவைக்களன்
* உப்பிலாக் கஞ்சியினை யுண்ணு மறுசுவை போல்...'
42) மேற்படி பாடல் இடம்பெறுகின்ற நூல் எது?
* முதுமொழி வெண்பா
43) முதுமொழி வெண்பாவின் ஆசிரியர் யார்?
* புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன்
44) இவரால் இயற்றப்பட்ட ஏனைய நூல்கள் இரண்டினைத் தருக.
* சூறாவளி படைப்போர், புதுகுஷ்ஷாம்
45) புலவர்மணி அவர்கள் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்?
* கிழக்கு மாகாணம் / மருதமுனை
46) இங்கு அறுசுவை உணவாகக் கருதப்படுவது எது?
* உப்பிலாக் கஞ்சி
47) 'தப்பிய கந்தை' என்பதால் விளங்கிக் கொள்வது யாது?
* துவைத்துக் கிழிந்த ஆடை
48) இப்பாடலில் இடம்பெறும் முதுமொழி யாது?
* மனம் கொண்டது மாளிகை
49) இப்பாடலின் பிரதான பொருளுக்குச் சமமாக வழக்கிலுள்ள பழமொழி ஒன்றினைக் குறிப்பிடுக.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
50) 'மனம் கொண்டதே மாளிகை' என்பதன் கருத்து யாது?
* உயர்வும் தாழ்வும் மனதைப் பொறுத்தததே.
(இன்னும் வரும்....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக