📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
புலமைப்பரிசில் பரீட்சை - தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புலமைப்பரிசில் பரீட்சை - தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஏப்ரல், 2025

தரம் 4 - தரம் 5 | சரியான சொல்லைத் தெரிந்து கோடிடுதல்

     தமிழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதே சிறப்பானது. ஒலி வேறுபாட்டுச் சொற்களுக்கு ஏற்ப, அவற்றின் பொருள்களும் வேறுபடும் என்பதை மாணவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். 

    இங்கு ஒவ்வொரு வினாவிலும் மூன்று சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

புதன், 2 ஏப்ரல், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

      பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    நாங்கள் அனைவரும் இரவு நேரம் நிலவின் ஔியில் குதூகலித்துக் கொண்டிருந்தோம். அவ்வேளையில் வானத்தில் வௌவால் கூட்டம் பறந்து சென்றது. அவற்றைப் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. வானத்தில் விண்மீன்கள் தகதகவென மின்னின. தவளைகள் கத்தும் சத்தம் காதைத் துளைத்தது. இரவில் பூத்த மலர்கள் கமகமவென நறுமணம் வீசின.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

சனி, 29 மார்ச், 2025

புலமைப் பரிசில் பரீட்சை - பகுதி 2 வினாக்கள்

 1) கீழ்வரும் பாடல் பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

கண்ணிரண்டும் கூர்மை

காதிரண்டும் கேண்மை

பெண்ணினத்தின் சாயல்

தெரியுதுந்தன் வடிவில்

 

எட்டி ஓடும் மானே

என்னிடம் நீ வந்தால்

வியாழன், 27 மார்ச், 2025

ஆங்கிலப் பழமொழிகளுக்கு நிகரான தமிழ்ப் பழமொழிகள் கற்போமா?

A Penny saved is a penny gained.
சிறு துளி பெருவெள்ளம்.

◆ A good horse often wants a good Spur.
சுடர் விளக்காயினும், தூண்டுகோல் வேண்டும்.

A lamb at home and lion at chase.
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.

◆ A burnt child dreads fire.
சூடுபட்ட பூனை அடுப்படியை அண்டாது.

◆ A stich in time saves nine.
உரிய காலத்தில் தைத்தல் ஒன்பது கிழிசலைத் தவிர்க்கலாம்.

சனி, 15 மார்ச், 2025

பழமொழிகளும் அவற்றின் பொருள்களும் அகர வரிசையில்

  1.  அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - ஒற்றுமையே பலம்.
  2. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் - உத்தம நட்பு
  3. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எல்லை மீறினால் எதுவும் தீமை பயக்கும்.
  4. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் - விடா முயற்சி பலன் தரும்.
  5. அழுத பிள்ளை பால் குடிக்கும் - முயற்சி செய்தவர் பயன் பெறுவர்
  6. அணை கடந்த வௌ்ளம் அழுதாலும் வராது - நடந்து முடிந்த செயலை நினைப்பதில் பலனில்லை.

திங்கள், 3 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

     பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    கிராமம், நகரம், பூங்கா, மரம், செடி, கொடி என எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டி வாழும். சிட்டுக் குருவிகள் சிறு சிறு கூட்டங்களாக வசிக்கும். ஆண் குருவிகளுக்கு சாம்பல் நிறத்தில் சிறிய கொண்டை இருக்கும். பெண் குருவிகளுக்கு கொண்டை இருக்காது. சிட்டுக் குருவிகளின் ஆயுட் காலம் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். தங்களுக்குள் சிறிய சத்தங்கள், இடைவிடாத கீச்சுக் குரல்கள் மூலம் மற்றைய குருவிகளைத் தொடர்பு கொள்கின்றன.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

சனி, 1 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

    பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    காலிக் கோட்டையானது போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான கோட்டையாகும். இது பார்ப்பதற்கு ஈடு இணையற்று கம்பீரமாகக் காட்சி அளித்தது. நாங்கள் கடகடவென அதன் நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். அங்கே புராதன ஆயுதங்கள் காணப்பட்டன. அவற்றைப் பார்வையிட்டபடியே கோட்டையின் மேற்பகுதிக்கு வந்தோம். ஆகா! மதிலின் மேல் முட்டி மோதி கடலலைகள் சூரிய ஔிபட்டு குன்றின் மேலிட்ட தீபம் போல் காட்சி அளித்தன. காலி நகரின் அழகு எம்மை மெய் மறந்து பரவசப்படுத்தியது.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

புதன், 26 பிப்ரவரி, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

   பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

ஆதி காலத்தில் திறந்த வௌிகளில் மனிதர்கள் வசித்து வந்தனர். பின்னர் குகைகளில் வசிக்கக் கற்றுக் கொண்டனர். அவர்கள் கற்களைக் கூர்மையாக்கி அதை ஒரு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் கூர்மையான கல் ஆயுதமே மனிதர்களின் முதல் எழுதுகோலாகும். அந்தக் கூரிய கல்லை எழுதுகோலப் போல் பயன்படுத்தி, தாங்கள் வசித்த குகைச் சுவர்களில் சித்திரங்களை வரைந்தனர். அச்சித்திரங்கள் அவர்களின் தினசரி வாழ்க்கையையும்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாப்பத்திரம்

  பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    மரங்கள் மனித குலத்திற்குச் செய்துவரும் நன்மைகள் கணக்கில் அடங்காதவை. இவை அசுத்த வாயுவான கரியமில வாயுவை உட்கொண்டு, மனிதர்களுக்குத் தேவையான ஒட்சிசன் வாயுவை வௌியிடுகின்றன. சாலை ஓரங்களில் நிற்கும் மரங்கள் நிழல் கொடுத்துப் பயணத்தை இனிமையாக்குகின்றன. உணவாகும்

திங்கள், 27 ஜனவரி, 2025

தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil

  பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

நான் விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கின்றேன். ஒருநாள் வகுப்பாசிரியர் தினக்குறிப்பு எழுதும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எம்முடன் கலந்துரையாடினார். அத்துடன், மாதிரித் தினக்குறிப்பொன்றை எழுதவும் கற்றுக் கொடுத்தார். பின்னர் வீட்டு வேலையாக ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பை எழுதி வருமாறு கூறினார். அதற்கமைய வீட்டிலும், வௌியிலும் நான் பெற்ற அனுபவங்களை தினக்குறிப்பில் எழுதினேன். எழுதப்பட்ட ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பு சிறப்பான