📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 2 ஏப்ரல், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

      பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    நாங்கள் அனைவரும் இரவு நேரம் நிலவின் ஔியில் குதூகலித்துக் கொண்டிருந்தோம். அவ்வேளையில் வானத்தில் வௌவால் கூட்டம் பறந்து சென்றது. அவற்றைப் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. வானத்தில் விண்மீன்கள் தகதகவென மின்னின. தவளைகள் கத்தும் சத்தம் காதைத் துளைத்தது. இரவில் பூத்த மலர்கள் கமகமவென நறுமணம் வீசின.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

1. இரவு நேரத்தில் ஔியை வழங்கியது எது?

.......................................................

2. நட்சத்திரங்கள் என்பதை குறிக்கும் சொல் எது?

.....................................................

3. இரட்டைக் கிளவிச் சொல் ஒன்றினை எழுதுக.

....................................................

4. தன்மைப் பன்மைப் பெயர்ச்சொல் ஒன்றை எழுதுக.

.....................................................

5. 'வானத்தில் வௌவால் கூட்டம் பறந்து சென்றது' எனும் வாக்கியத்தை நிகழ்கால வாக்கியமாக மாற்றி எழுதுக.

..............................................................

6. சினைப் பெயர் ஒன்றினை எழுதுக. ..................................................................

  

02. தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள வாக்கியம் ஒன்றினை எழுதுக.

    1) பயணிகள் / பெறாவிட்டால் / அறவிடப்படும் / பேருந்தில் / பயணச்சீட்டைப் / தண்டப்பணம் / பயணிக்கும்

..................................................................................................................................................

    2) தலையணைக்கு / அருகில் / நித்திரை / வேண்டாம் / கொள்ளும்போது / கைப்பேசியைத் / வைக்க

..................................................................................................................................................


03. உயர்திணை இறந்தகால பன்மை வினைச்சொல்லைத் தெரிவு செய்து கோடிடுக.

    (ஓடினான் / சென்றார்கள் / உண்டது)


04. பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறிகளை இடுக.

    1) நான் அவனுக்கருகில் செல்லும்போது சத்தம் போடாமல் அமைதியாக இரு எனச் சிங்கம் கட்டளை இட்டது

    2) சிங்கராசாவே என்னை அழைத்தீர்களா

    

05. பின்வரும் பழமொழிகளைப் பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான சொல்லைக் கீறிட்ட இடத்தில் எழுதுக.

        (1) நோயற்ற ............................................... குறைவற்ற ..........................

        (2) ......................................... கொடியும் ........................... மிடுக்கு.


06. இடைவௌிக்குப் பொருத்தமான சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

    1) அப்பா சந்தையில் ................................ வாங்கினார்.

        (விலாம்பழம் / விழாம்பழம் / விளாம்பழம்)

    2) நான் .............................................. குடித்தேன்.

        (செவ்விளனி / செவ்விளநீர் / செவ்விளனீர்)


07. சரியான விடையின் கீழ்க் கோடிடுக.

    1. பசுவின் ............................... நீளமானது. (வாள் / வால் / வாழ்)

    2. பூக்கள் நறு .................................. வீசும். (மனம் / மநம் / மணம்)


08. சரியான விடையினை எழுதுக.

    1. தன்னைப் பற்றி தானே எழுதும் சரிதை..................................................

    2. தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவர் ..................................................


09. கீழே தரப்பட்டுள்ள இணைமொழிகளைப் பூர்த்தி செய்க.

    1. கண்ணும் .....................................................

    2. அல்லும் ........................................................


10. புலி - குட்டி போல யானைக்கு .......................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக