📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
தரம் 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரம் 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜூலை, 2025

தரம் 5 முன்னோடிப் பரீட்சை வினாப்பத்திரம் - வினாத்தாள் 2

1. பின்வரும் பந்தியை வாசித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

      குமார் மாலைநேர வகுப்புக்கு தனது தாயாருடன் சென்றான். அப்போது பாதையோரத்தில் சிறிய பூனைக் குட்டியொன்று கத்தியபடி இருந்தது. பாசத்துடன் அப்பூனைக்குட்டியைத் தூக்கி எடுத்தான். அவன் ‘அம்மா இந்தப் பூனைக்குட்டி பாவம் வீட்டுக்குக் கொண்டு போவோமா?’ என்று கேட்டான். அம்மாவும் சரியெனக் கூறியதால் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
       I.          பந்தியில் வந்துள்ள காலப் பெயர் ஒன்றை எழுதுக.
     II.          பந்தியில் வந்துள்ள பெயரடைமொழிச் சொல்லொன்றை எழுதுக.

சனி, 3 மே, 2025

தரம் 4 - 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாக்கள் - தமிழ்

 பின்வரும் பந்தியை வாசிக்கவும்.

1.       மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் ஆகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன.

பாலைவனங்கள் ஆண்டுக்கு இருநூற்றைம்பது மில்லி மீற்றருக்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. அதிக வறட்சியைத் தாங்கி

வியாழன், 24 ஏப்ரல், 2025

தரம் 4 - தரம் 5 | சரியான சொல்லைத் தெரிந்து கோடிடுதல்

     தமிழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதே சிறப்பானது. ஒலி வேறுபாட்டுச் சொற்களுக்கு ஏற்ப, அவற்றின் பொருள்களும் வேறுபடும் என்பதை மாணவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். 

    இங்கு ஒவ்வொரு வினாவிலும் மூன்று சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

புதன், 2 ஏப்ரல், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

      பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    நாங்கள் அனைவரும் இரவு நேரம் நிலவின் ஔியில் குதூகலித்துக் கொண்டிருந்தோம். அவ்வேளையில் வானத்தில் வௌவால் கூட்டம் பறந்து சென்றது. அவற்றைப் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. வானத்தில் விண்மீன்கள் தகதகவென மின்னின. தவளைகள் கத்தும் சத்தம் காதைத் துளைத்தது. இரவில் பூத்த மலர்கள் கமகமவென நறுமணம் வீசின.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

சனி, 29 மார்ச், 2025

புலமைப் பரிசில் பரீட்சை - பகுதி 2 வினாக்கள்

 1) கீழ்வரும் பாடல் பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

கண்ணிரண்டும் கூர்மை

காதிரண்டும் கேண்மை

பெண்ணினத்தின் சாயல்

தெரியுதுந்தன் வடிவில்

 

எட்டி ஓடும் மானே

என்னிடம் நீ வந்தால்

திங்கள், 3 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

     பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    கிராமம், நகரம், பூங்கா, மரம், செடி, கொடி என எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டி வாழும். சிட்டுக் குருவிகள் சிறு சிறு கூட்டங்களாக வசிக்கும். ஆண் குருவிகளுக்கு சாம்பல் நிறத்தில் சிறிய கொண்டை இருக்கும். பெண் குருவிகளுக்கு கொண்டை இருக்காது. சிட்டுக் குருவிகளின் ஆயுட் காலம் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். தங்களுக்குள் சிறிய சத்தங்கள், இடைவிடாத கீச்சுக் குரல்கள் மூலம் மற்றைய குருவிகளைத் தொடர்பு கொள்கின்றன.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

சனி, 1 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

    பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    காலிக் கோட்டையானது போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான கோட்டையாகும். இது பார்ப்பதற்கு ஈடு இணையற்று கம்பீரமாகக் காட்சி அளித்தது. நாங்கள் கடகடவென அதன் நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். அங்கே புராதன ஆயுதங்கள் காணப்பட்டன. அவற்றைப் பார்வையிட்டபடியே கோட்டையின் மேற்பகுதிக்கு வந்தோம். ஆகா! மதிலின் மேல் முட்டி மோதி கடலலைகள் சூரிய ஔிபட்டு குன்றின் மேலிட்ட தீபம் போல் காட்சி அளித்தன. காலி நகரின் அழகு எம்மை மெய் மறந்து பரவசப்படுத்தியது.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

புதன், 26 பிப்ரவரி, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

   பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

ஆதி காலத்தில் திறந்த வௌிகளில் மனிதர்கள் வசித்து வந்தனர். பின்னர் குகைகளில் வசிக்கக் கற்றுக் கொண்டனர். அவர்கள் கற்களைக் கூர்மையாக்கி அதை ஒரு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தனர். அந்தக் கூர்மையான கல் ஆயுதமே மனிதர்களின் முதல் எழுதுகோலாகும். அந்தக் கூரிய கல்லை எழுதுகோலப் போல் பயன்படுத்தி, தாங்கள் வசித்த குகைச் சுவர்களில் சித்திரங்களை வரைந்தனர். அச்சித்திரங்கள் அவர்களின் தினசரி வாழ்க்கையையும்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

Grade 4 and 5 English | ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் 2

 

Common Flowers

  1. rose - ரோசா
  2. sunflower - சூரிய காந்தி
  3. shoe-flower - சப்பாத்திப் பூ
  4. carnation - காணேசன்
  5. temple flower - விகாரைப்பூ
  6. jasmine - மல்லிகை
  7. lotus - தாமரை
  8. blue sky flower  - நீலோற்பலம் / நீல அல்லிப்பூ

சனி, 15 பிப்ரவரி, 2025

​பொன்பூச்சொரியும் பாடலும் பொருளும்

'பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்

நன் பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரவை

வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக

வாசலிடைக் கொன்றை மரம்.'

மேலுள்ள செய்யுள் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பட்ட பாடலாகும். இந்தப் பாடல் எழுந்தமைக்கான காரணமும் உள்ளதை நாம்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாப்பத்திரம்

  பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    மரங்கள் மனித குலத்திற்குச் செய்துவரும் நன்மைகள் கணக்கில் அடங்காதவை. இவை அசுத்த வாயுவான கரியமில வாயுவை உட்கொண்டு, மனிதர்களுக்குத் தேவையான ஒட்சிசன் வாயுவை வௌியிடுகின்றன. சாலை ஓரங்களில் நிற்கும் மரங்கள் நிழல் கொடுத்துப் பயணத்தை இனிமையாக்குகின்றன. உணவாகும்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

Grade 4 and 5 English | ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் 1

Objects in the Classroom

  1. Chair  - கதிரை
  2. cupboard - அலுமாரி
  3. desk - மாணவர் மேசை
  4. blackboard - கரும்பலகை
  5. chalk - வெண்கட்டி
  6. bags - பைகள்
  7. books - புத்தகங்கள்
  8. bottles - போத்தல்கள் (குவளைகள்)
  9. register - மாணவர் பதிவுப்புத்தகம்
  10. record book - பதிவுப்புத்தகம்
  11. table - மேசை
  12. table cloth - மேசைப்புடைவை
  13. broom - தும்புத்தடி

திங்கள், 27 ஜனவரி, 2025

தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil

  பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

நான் விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கின்றேன். ஒருநாள் வகுப்பாசிரியர் தினக்குறிப்பு எழுதும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எம்முடன் கலந்துரையாடினார். அத்துடன், மாதிரித் தினக்குறிப்பொன்றை எழுதவும் கற்றுக் கொடுத்தார். பின்னர் வீட்டு வேலையாக ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பை எழுதி வருமாறு கூறினார். அதற்கமைய வீட்டிலும், வௌியிலும் நான் பெற்ற அனுபவங்களை தினக்குறிப்பில் எழுதினேன். எழுதப்பட்ட ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பு சிறப்பான

செவ்வாய், 21 ஜனவரி, 2025

தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil

 பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் எனப்படும். உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பாலைவனமாகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் என்பன அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. இருப்பினும் பாலை வனத்தில் காணப்படும் சுனைகளால் பச்சைப் பசேலெனக் காணப்படும் பாலைவனப் பசுந்தரைகள் இப்பாலைவனங்களை அழகுபடுத்துகின்றன. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீர் அருந்துவதற்கு இந்தச் சுனைகள் பெரிதும் உதவுகின்றன.          

பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.

சனி, 18 ஜனவரி, 2025

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 3

பின்வரும் பந்தியை வாசிக்க.

            நீங்கள் எனக்கு எம் நாட்டில் இருக்கும் சித்திரக் குன்றமான சீகிரியா பற்றிக் கூறினீர்கள் அல்லவா? காசியப்பன் என்னும் அரசன் தனது பாதுகாப்பிற்காக மறைந்திருந்து வாழ்ந்த போது, அதனை அவன் ஓர் எழில் கொஞ்சும் குன்றாக்கினான் என்றீர்களே. ஆகா! எத்தனை அழகு! எத்தனை வியப்பான காட்சிகள்! நாம் கல்விச் சுற்றுலா சென்ற வேளை அங்கு போயிருந்தோம். தூரத்தில் நின்று பார்த்தபோது ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பது  போலக் காட்சியளித்தது.

வியாழன், 16 ஜனவரி, 2025

உயிர்க்குறிகள்

தமிழ் மொழியிலுள்ள உயிர்க்குறிகள் பற்றி தரம் 4, தரம் 5 மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள  வேண்டும். புலமைப் பரிசில் பரீட்சையில் உயிர்க்குறிகள் பற்றிய வினாக்களும் இடம்பெறுகின்றன. 

இங்கு உயிர்க்குறிகள் தொடர்பான அட்டவணை இற்றைப்படுத்தப்படுகின்றது. 

வியாழன், 2 ஜனவரி, 2025

தரம் 5 - தமிழ் - பந்தியை வாசித்து விடையளித்தல் - கடந்த கால வினாக்கள்

1. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2012 கடந்த கால வினாத்தாள்)

     நல்ல நண்பன் போல நல்ல புத்தகம் எமக்கு நல்வழி புகட்டும். மாணவப் பருவம் கிடைப்பதற்கு அரியத. அதனால் அப்பருவத்தைப் பிரயோசனம் உள்ளதாகக் கழிக்க வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேடிப்பெற்று அவற்றைக் கருத்தூன்றி வாசித்தல் வேண்டும். 

திங்கள், 30 டிசம்பர், 2024

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 2

  பின்வரும் பந்தியை வாசிக்க.

            மனிதனும் ஓர் இயற்கை. இயற்கையோடு தொடர்பு கொள்ளும்போது மனிதன் ஆற்றல் பெறுகிறான். இயற்கையோடு இணைந்து வாழ்பவருக்கு இயற்கையானது அறிவாகவோ, ஆற்றலாகவோ, செல்வமாகவோ தன்னை வாரி வழங்குகின்றது. இயற்கையை நேசிப்பவர்களிடம் அன்பு மிகுதியாகும். உள்ளத்தில் அழகு பெருக்கெடுக்கும். ஆர்வம் துளிர்விடும். மகிழ்ச்சி பன்மடங்காகும். புதுமை

சனி, 28 டிசம்பர், 2024

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 1

பின்வரும் பந்தியை வாசிக்க.

           ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டு மக்களின் கல்வியிற் தங்கியுள்ளது. அத்தகைய பெருமையை ஈட்டிக் கொடுப்பதற்குக் காரணமாக அமையும் நூல்களை நாம் கண்களைப் போன்று பேணிக் காப்பது கடமையாகும். எனவே நூல் நிலையங்களில் உள்ள நூல்களைக் கிழிக்காமலும், சிதைக்காமலும் பக்குவமாகப் பயன்படுத்துவோம். 


01. கீழேயுள்ள வினாக்களுக்கு விடைகளை இப்பந்தியில் இருந்து தெரிவுசெய்து எழுதுக.

1. ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டு மக்களின் எதில் தங்கியுள்ளது?

வெள்ளி, 27 டிசம்பர், 2024