📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 3 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

     பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    கிராமம், நகரம், பூங்கா, மரம், செடி, கொடி என எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டி வாழும். சிட்டுக் குருவிகள் சிறு சிறு கூட்டங்களாக வசிக்கும். ஆண் குருவிகளுக்கு சாம்பல் நிறத்தில் சிறிய கொண்டை இருக்கும். பெண் குருவிகளுக்கு கொண்டை இருக்காது. சிட்டுக் குருவிகளின் ஆயுட் காலம் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். தங்களுக்குள் சிறிய சத்தங்கள், இடைவிடாத கீச்சுக் குரல்கள் மூலம் மற்றைய குருவிகளைத் தொடர்பு கொள்கின்றன.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

1. ஆண் சிட்டுக் குருவிகளின் கொண்டை எந்த நிறமுடையது?

.......................................................

2. சிட்டுக் குருவிகளின் ஆயுட்காலம் சுமார் எத்தனை வருடங்களாகும்?

.....................................................

3. பெரிய என்பதன் எதிர்ச்சொல்லை பந்தியில் இருந்து தெரிந்து எழுதுக.

....................................................

4. சத்தம் என்பதன் பன்மைச் சொல்லைப் பந்தியில் இருந்து தெரிந்து எழுதுக.

.....................................................

5. வருடங்கள் என்பதன் ஒத்த கருத்துச் சொல்லைப் பந்தியில் இருந்து தெரிந்து எழுதுக.

..............................................................

6. இப்பந்தியிலுள்ள தகவல்களுக்கமைய பின்வரும் கூற்றுக்களில் பிழையான கூற்றைத் தெரிவு செய்க.

    1) பெண் சிட்டுக் குருவிகளுக்கு கொண்டை இருக்காது

    2) சிட்டுக் குருவிகள் தனித்தனியே வசிக்கும்.

    3) சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழுகின்றன.


02. கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் இருக்கும் வெற்றிடத்திற்குப் பொருத்தமான சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்து புள்ளிக் கோட்டில் எழுதுக.

    1) (பன் / பண்) ............................. மூலம் பாய் பின்னலாம்.

    2) நீர்த்தாங்கியினுள் தண்ணீர் விரைவாக ......................... (நிரைந்தது / நிறைந்தது)


03. வாக்கியங்களில் உள்ள இடைவௌிகளை அடைப்பினுள் உள்ள இணைமொழிகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

    (வாடி வதங்கி, நகமும் சதையும், காடு மேடு, ஓடி ஆடி)

    1. சந்தையில் காய்கறிகள் ........................... க் காணப்பட்டன.

    2. இடையன் தனது ஆட்டைத் தேடி .................... எல்லாம் அலைந்து திரிந்தான்.


04. பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்திலும் எழுவாய், பயனிலைத் தொடர்பு சரியாயின் (சரி) எனவும், பிழையாயின் (பிழை) எனவும் எதிரேயுள்ள அடைப்புக்குறிக்குள் எழுதுக.

    1) மாமாவின் தோட்டத்தில் பெரிய மரங்கள் நிறைந்துள்ளது (    )

    2) எறும்புக் கூட்டம் மெதுவாக ஊர்ந்து சென்றன. (     )

    3) நாட்டார் பாடல்கள் இனிமையானவை. (      )

    4) நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின. (      )


05. பின்வரும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான பழமொழியை எழுதுக.

        பெரியவர்களும் சில சந்தர்ப்பங்களில் தவறி விடுவதுண்டு.

        ............................................................................................................................


06. கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் இருக்கும் வெற்றிடத்திற்குப் பொருத்தமான சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவுசெய்து, புள்ளிக் கோட்டில் எழுதுக.

    1) கடுகதிப் புகையிரதம் வேகமாகச் ........................... (செல்கிறது / செல்கின்றன)

    2) பலத்த காற்று வீசியதால் மரம் சரிந்து .................... (விழுந்தது / விழும்)


07. கீழேயுள்ள சொற்றொடர்களுக்குரிய தனிச் சொல்லை எழுதுக.

    1. ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் ............................................................

    2. பேருந்தில் பயணச் சீட்டு வழங்குபவர் ..............................................


08. பொருத்தமான இரட்டைக் கிளவியை வாக்கியத்திலுள்ள இடைவௌியில் எழுதுக.

    1. ஆற்று நீர் ......................................... வென்று ஓடியது.


09. பால் + சோறு என்பதைச் சேர்த்து எழுதுக. ....................................................


10. கீழே தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியம் ஒன்று எழுதுக.

    பார்ப்பதற்கு ./ அழகாக / அம்மரங்கள் / காட்சியளிக்கும் / மிகவும்

    ............................................................................................................................................

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக