- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - ஒற்றுமையே பலம்.
- அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் - உத்தம நட்பு
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எல்லை மீறினால் எதுவும் தீமை பயக்கும்.
- அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் - விடா முயற்சி பலன் தரும்.
- அழுத பிள்ளை பால் குடிக்கும் - முயற்சி செய்தவர் பயன் பெறுவர்
- அணை கடந்த வௌ்ளம் அழுதாலும் வராது - நடந்து முடிந்த செயலை நினைப்பதில் பலனில்லை.
- அறையில் ஆடியன்றோ அம்பலத்தில் ஆட வேண்டும் - எதனையும் முன் அனுபவத்துடன் செய்ய வேண்டும்.
- அடாது செய்பவன் படாது படுவான் - கேடு செய்பவர் பலனை அனுபவிப்பர்.
- அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி - முன்மாதிரி
- அஞ்சினவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேய் - பயந்தவனை எல்லாம் பயமுறுத்தும்
- ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் - காலம் மாறி மாறி வரும்.
- ஆனைக்கும் அடி சறுக்கும் - பெரியோரும் சில வேளைகளில் தவறிழைக்கலாம்.
- ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடு - எதையும் அளவோடு செய்தல் வேண்டும்.
- ஆழமறியாது காலை விடாதே - எதனையும் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
- ஆழ அமுக்கினாலும் நாழி முகவாது - கொள்ளக் கூடிய அளவே கொள்ளும்.
- ஆடையில்லா மனிதன் அரை மனிதன் - உடையின் சிறப்பு
- ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் - கோபம் சிந்தனைக்கு இடையூறாக இருக்கும்.
- ஆறின கஞ்சி பழங்கஞ்சி - காலத்தின் மகிமை
- ஆட மாட்டாதவள் அரங்கு பிழை என்றாளாம் - விடயப் புலமையின்றி வேறொன்றைக் கூறக் கூடாது.
- இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை - திருப்திப்படாத மனம்
- இரக்கப் போனாலும் சிறக்கப் போ - வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும்.
- இளமையில் கல்வி சிலையில் எழுத்து - இள வயதுக் கல்வி நிலைத்திருக்கும்.
- இறைத்த கிணறே ஊறும். இறையாத கிணறே நாறும் - தருமத்தின் மகிமை
- இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை - தருமம் செய்வதன் சிறப்பு
- ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும் - பணத்தின் வலிமை
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை - நன்றி மறவாமை
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே - சுவையில்லாத உணவினால் பயன் கிடையாது.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் - பயன்படுத்தப்படாத பொருள் பயனற்றுப் போகும்.
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? - தகுதிக்கு மேல் எதையும் பெற முடியாது.
- ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் - பகை அழிவைத் தரும்.
- எடுக்கிறது பிச்சை. ஏறுவது பல்லக்கு - வீண் பெருமை
- எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே - கிடைக்காத ஒன்றிற்காக ஏங்குதல்.
- எலி வளையானாலும் தனி வளை வேண்டும் - சிறிய பொருளானாலும் சொந்தமாக இருக்க வேண்டும்.
- எறும்பூரக் கற் குழியும் - தொடர் முயற்சியின் பலன்
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது - வெறும் புத்தகப் படிப்பின் பயன் / பயனற்ற கல்வி
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - இளமையில் எதனையும் செய்ய வேண்டும்.
- ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்குமா? - காலம் நில்லாதது.
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமை
- ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தாற் சரி - எப்படியானாலும் காரியம் முடிய வேண்டும்.
- ஒரு கை தட்டினால் ஓசை வருமா? - கூட்டு முயற்சியின் தேவைப்பாடு
(தொடரும்)
பின்வரும் பழமொழிகளைப் பூர்த்தி செய்க.
- ....................................... ......................................... ............................... அம்மியும் நகரும்.
- அன்பான ..................................... .................................................... அறியலாம்.
- அஞ்சினவன் கண்ணுக்கு ............................................. ....................................................
- ................................. .............................. ................................ தலை முழுகு.
- அணை ........................................ வௌ்ளம் .................................................. வராது.
- ஆனைக்கொரு காலம் ..................................................... ..........................................
- ..................................... .......................................... அளவறிந்து போடு.
- ஆத்திரக்காரனுக்கு ........................................ மத்திமம்
- இறைத்த .......................................... ......................................... இறையாத கிணறே நாறும்.
- ஈட்டி எட்டின .................................. ............................. .......................... பாதாளம் மட்டும் பாயும்.
- உயர உயரப் பறந்தாலும் ........................................ ..................................................?
- ஊர் இரண்டு பட்டால் ............................................... ...................................................
- எலி .......................................... தனி வளை ............................................
- .................................................. வளையாதது ........................................... வளையுமா?
- ................................................. ........................... ஓசை உண்டாகுமா?
- காக்கைக்கும் தன்குஞ்சு ........................... .......................................................
- ஐந்து பணத்துக்குக் .................................. ................................. ஆறு கடக்கப் பாயவும் வேண்டும்.
- கிணற்றுத் ....................................... ........................................ வழக்கமேன்?
- குற்றம் ........................................... சுற்றம் ..................................................
- குப்பையில் ................................. குன்றிமணி ...........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக