
Ø இக்கட்டுரையை எழுதியவர் பண்டிதமணி சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை ஆவார்.
Ø இது ‘இலக்கியவழி’ எனும் நூலில் உள்ளதாகும்.
Ø கந்தபுராணம், சைவ நற்சிந்தனைகள், கம்பராமாயணக் காட்சிகள், நாவலரும் கோயிலும், ஆறுமுக நாவலர், செந்தமிழ்க் களஞ்சியம்.... என்பன இவரது படைப்புக்களிற் சிலவாகும்.
Ø நாவலர் என்பதன் பொருள் ‘நாவன்மை மிக்கவர்’ என்பதாகும்.
Ø ஆறுமுக நாவலருக்கு ‘நாவலர்’
என்ற பட்டத்தை வழங்கியவர் ‘திருவாடுதுறை ஆதீனம்’ ஆவார்.
Ø ‘நாவலர் எழுந்தார்’ என்ற கட்டுரையில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் கூட்டம் (இலங்கை சட்ட நிரூபண சபையில் தமிழரின் பிரதிநிதியாக இருந்த சேர்.
முத்துக்குமாரசுவாமி காலமானதால், அவரது வெற்றிடத்திற்காக ) இலங்கை சட்டசபைக்குப்
பொருத்தமான பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்தவதற்கான கூட்டமாகும்.
Ø இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டியவர் ஆறுமுக நாவலரவர்கள்
ஆவார்.
Ø இக்கூட்டம் நடைபெற்ற ஆண்டு (நாவலர் இறைபதம் அடைவதற்கு
ஓராண்டுக்கு முன்னர்) அதாவது 1878 ஆண்டு.
Ø நாவலர் அவர்களின் வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையிலேயே அந்தக் கூட்டம் நடைபெற்றது.
Ø அவர் தலைமை வகிக்காமைக்கான காரணம் அவருக்கு ஏற்பட்ட தொய்வு
வருத்தம் என்னும் காச நோய் ஆகும்.
Ø அதனால் அவருக்குப் பதிலாக தலைமை வகித்தவர் - வை.
விசுவநாதம்பிள்ளை அவர்களாவார்.
Ø சென்னை சர்வகலாசாலை (பல்கலைக்கழகம்) நடாத்திய பீ.ஏ (கலைமாணி)
பரீட்சையில் முதன் முதலில் சித்தியடைந்த யாழ்ப்பாணத்தவர்கள் இருவர் - வை.
விசுவநாதம்பிள்ளை, சி.வை. தாமோதரம்பிள்ளை
Ø இலங்கை சட்டசபையில் இலங்கையின் பிரதிநிதித்துவத்திற்காக போட்டியிட்டவர்கள்
இருவர் - பிறிற்றோ, சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்.
Ø அக்கூட்டத்திற்கு பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வைத்த
பெயர் வாத மகா சபை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days