📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 5 பிப்ரவரி, 2026

நாவலர் எழுந்தார் கட்டுரைக் குறிப்புகள்

2. நாவலர் எழுந்தார்

Ø  இக்கட்டுரையை எழுதியவர் பண்டிதமணி சின்னத்தம்பி  கணபதிப்பிள்ளை ஆவார்.

Ø  இது ‘இலக்கியவழி’ எனும் நூலில் உள்ளதாகும்.

Ø  கந்தபுராணம், சைவ நற்சிந்தனைகள், கம்பராமாயணக் காட்சிகள், நாவலரும் கோயிலும், ஆறுமுக நாவலர், செந்தமிழ்க் களஞ்சியம்.... என்பன இவரது படைப்புக்களிற் சிலவாகும்.

Ø  நாவலர்  என்பதன் பொருள் ‘நாவன்மை மிக்கவர்’ என்பதாகும்.

Ø  ஆறுமுக நாவலருக்கு  ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியவர் ‘திருவாடுதுறை ஆதீனம்’ ஆவார்.

Ø  ‘நாவலர் எழுந்தார்’ என்ற கட்டுரையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கூட்டம் (இலங்கை சட்ட நிரூபண சபையில் தமிழரின் பிரதிநிதியாக இருந்த சேர். முத்துக்குமாரசுவாமி காலமானதால், அவரது வெற்றிடத்திற்காக ) இலங்கை சட்டசபைக்குப் பொருத்தமான பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்தவதற்கான கூட்டமாகும்.

Ø  இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டியவர் ஆறுமுக நாவலரவர்கள் ஆவார்.

Ø  இக்கூட்டம் நடைபெற்ற ஆண்டு (நாவலர் இறைபதம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர்) அதாவது 1878 ஆண்டு.

Ø  நாவலர் அவர்களின் வண்ணார் பண்ணை சைவப்பிரகாச  வித்தியாசாலையிலேயே அந்தக் கூட்டம் நடைபெற்றது.

Ø  அவர் தலைமை வகிக்காமைக்கான காரணம் அவருக்கு ஏற்பட்ட தொய்வு வருத்தம் என்னும் காச நோய் ஆகும்.

Ø  அதனால் அவருக்குப் பதிலாக தலைமை வகித்தவர் - வை. விசுவநாதம்பிள்ளை அவர்களாவார்.

Ø  சென்னை சர்வகலாசாலை (பல்கலைக்கழகம்) நடாத்திய பீ.ஏ (கலைமாணி) பரீட்சையில் முதன் முதலில் சித்தியடைந்த யாழ்ப்பாணத்தவர்கள் இருவர் - வை. விசுவநாதம்பிள்ளை,  சி.வை.  தாமோதரம்பிள்ளை

Ø  இலங்கை சட்டசபையில் இலங்கையின் பிரதிநிதித்துவத்திற்காக போட்டியிட்டவர்கள் இருவர் - பிறிற்றோ, சேர். பொன்னம்பலம் இராமநாதன்  ஆகியோர்.

Ø  அக்கூட்டத்திற்கு பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வைத்த பெயர் வாத மகா சபை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days