📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 1 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

    பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    காலிக் கோட்டையானது போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான கோட்டையாகும். இது பார்ப்பதற்கு ஈடு இணையற்று கம்பீரமாகக் காட்சி அளித்தது. நாங்கள் கடகடவென அதன் நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். அங்கே புராதன ஆயுதங்கள் காணப்பட்டன. அவற்றைப் பார்வையிட்டபடியே கோட்டையின் மேற்பகுதிக்கு வந்தோம். ஆகா! மதிலின் மேல் முட்டி மோதி கடலலைகள் சூரிய ஔிபட்டு குன்றின் மேலிட்ட தீபம் போல் காட்சி அளித்தன. காலி நகரின் அழகு எம்மை மெய் மறந்து பரவசப்படுத்தியது.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

1. காலிக் கோட்டையைக் கட்டியவர்கள் யார்?

.......................................................

2. புதுமையான என்ற சொல்லின் எதிர்ச்சொல் யாது?

.....................................................

3. உயர்திணை, பன்மை, பலர்பால் பெயர்ச்சொல்லை எழுதுக.

....................................................

4. இடப்பெயர் ஒன்று தருக.

.....................................................

5. எழில் என்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுக.

..............................................................

6. பந்தியில் இடம்பெற்றுள்ள இரட்டைக் கிளவிச் சொல்லை எழுதுக.

----------------------------------------------


02. கீழே தரப்பட்டுள்ளவற்றிற்கு அடைப்புக்குள் இருந்து பொருத்தமான சொல்லைத் தெரிந்து புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.

(அலுமாரி, பெரியம்மா, பந்துகள், பிள்ளைகள்)

    1. உயர்திணை, பன்மைப் படர்க்கைப் பெயர்ச்சொல் ..........................................

    2. உயர்திணை, ஒருமைப் பெயர்ச்சொல் ................................................

    3. அஃறிணை ஒருமைப் பெயர்ச்சொல் .....................................................


03. பின்வரும் வாக்கியங்களை எழுத்து மொழியில் எழுதுக.

    1. அப்பா கோடாலி வேண்டினார். .....................................................................

    2. நான் போட்டு வாறன் ........................................................................................


04. பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்து புள்ளிக்கோட்டில் எழுதுக.

    1. மழை வௌ்ளம் எங்கும் ........................... (பரந்து / பறந்து) பாய்ந்தது.

    2. சிறுவர்கள் கடற்கரையில் .................... களைப் (ஊரி, ஊறி) பொறுக்கு விளையாடினார்கள்.


05. பின்வரும் தொடர்மொழிகளுக்குரிய தனிச்சொல்லைக் கீறிட்ட இடத்தில் எழுதுக.

    1. அகர வரிசைப்படி சொற்களுக்குப் பொருள் கூறும் நூல் ..............................

    2. முனிவர்கள் வசிக்கும் இடம் .............................................


06. பின்வரும் சுருக்கக் குறியீடுகளை விரித்து எழுதுக.

    1. பி.ப. ...........................................

    2. அ.ப. ..........................................


07. பனை - வடலி என்பது போல தென்னை ....................................


08. பின்வரும் வாக்கியங்களுக்குப் பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.

    1. உனக்குச் சிலந்தியைப் பற்றித் தெரியுமா

    2. மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம் என்பன முக்கனிகளாகும்


09. பின்வரும் பழமொழியைப் பூர்த்தி செய்யப் பொருத்தமான சொல்லைக் கீறிட்ட இடத்தில் எழுதுக.

    1. காற்றுள்ள போதே ................................................

    2. அடம்பன் கொடியும் திரண்டால் .......................................


10. பின்வரும் ஒவ்வொரு வாக்கியமும் சரியாயின் (சரி) எனவும், பிழையாயின் (பிழை) எனவும் எதிரேயுள்ள அடைப்புக்குறிக்குள் அடையாளம் இடுக.

    1. மான் கூட்டம் சிதறி ஓடின. (     )

    2. ஒவ்வொரு இலையும் விழுந்தது.  (        )


11. சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்லைத் தெரிவு செய்து, அதன் கீழ்க் கோடிடுக.

    1. தொழிலாளி    2. தொளிலாழி    3/ தொளிளாழி


12. தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள வாக்கியமாக எழுதுக.

    தான் / நாங்கள் / கைகள் / உங்கள்

    .........................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக