📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 23 பிப்ரவரி, 2026

தமிழறிவு வினா - விடை

  1.  சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்? 96 வகை
  2. சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 வகை என வகைப்படுத்திய நூல் எது? சதுரகராதி
  3. பரணி என்பது யாது? 'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி' - அதாவது, போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது.
  4. தமிழின் முதல் பரணி நூல் எது? கலிங்கத்துப் பரணி.
  5. கலிங்கத்துப் பரணி எனும் நூலை எழுதியவர் யார்? செயங்கொண்டார் 
  6. 'வாயில் இலக்கியம்' அல்லது 'சந்து இலக்கியம்' என்று அழைக்கப்படும் இலக்கிய வகை எது? தூது இலக்கியம்
  7. பல்வேறு வகையான பாக்களும், உறுப்புகளும் கலந்து பாடப்படும் நூல் எது? கலம்பகம்
  8. முதன் முதல் எழுந்த கலம்பக நூல் எது? நந்திக் கலகம்பகம் (மூன்றாம் நந்திவர்ம மன்னன் மீது பாடப்பட்டது.)
  9. குற்றால நாதரின் புகழை விஞ்சிப்பாடப்படும் நூல் எது? திருக்குற்றாலக் குறவஞ்சி.
  10. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்? திரிகூட ராசப்பக் கவிராயர்.
  11. 'மருள் நீக்கியார்' எனும் இயற்பெயர் கொண்ட பக்தி இலக்கியப் புலவர் யார்? திருநாவுக்கரசர்
  12. சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் யார்? நம்பியாண்டார் நம்பி (முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் திருஞான சம்பந்தர்)
  13. வைணவ சமய ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் எது? நாலாயிர திவ்ய பிரபந்தம்
  14. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்? நாதமுனிகள் (இந்நூல் 'திராவிட வேதம்' என்றும் அழைக்கப்படுகிறது.)
  15. 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' எனப் போற்றப்படும் நூலைப் பாடியவர் யார்? மாணிக்கவாசகர்
  16. தேவாரம் என்பது யார் யாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்? திருநாவுக்கரசன், திருஞானசம்பந்தர், சுந்தரர்
  17. 157 புலவர்களால் பாடப்பட்ட, ஔவையாரால் அதிக பாடல்கள் பாடப்பட்ட நூல் எது? புறநானூறு
  18. புறநானூறு எனும் சங்க நூலை முதன் முதல் பதிப்பித்தவர் யார்? உ.வே. சாமிநாதையர் (1894)
  19. ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், மலரும் மாலையும், உமர் கையாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச செல்வம் எனும் நூல்களின் ஆசிரியர் யார்? 'குழந்தைக் கவிஞர்' கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  20. உலக தாய்மொழித்தினம் ஒவ்வொரு வருடமும் எத்தனையாம் திகதி கொண்டாடப்படுகிறது? பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி
  21. எட்வின் அர்னால்ட் எனும் ஆங்கிலக் கவிஞரால் எழுதப்பட்ட 'லைட் ஒப் ஆசியா' எனும் நூலைத் தழுவி, தமிழில் எழுதப்பட்ட நூல் எது? ஆசிய ஜோதி
  22. 'செந்நாப்போதார்' என்று அழைக்கப்படும் புலவர் யார்? திருவள்ளுவர்
  23. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் எந்த சமயத்தைச் சேர்ந்தவை? சமண சமய சார்புடையவை.
  24. ஐஞ்சிறு காப்பியங்களும் எவை? உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி
  25. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்
  26. சிலப்பதிகாரத்தில் மொத்தம் எத்தனை பாடல் அடிகள் உள்ளன? 5001
  27. சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 30 காதைகள்
  28. சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டுள்ள பாவகை எது? நிலைமண்டில ஆசிரியப்பா
  29. சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? 3
  30. புகார் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 10
  31. வஞ்சிக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 7
  32. மதுரைக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days