- சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்? 96 வகை
- சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 வகை என வகைப்படுத்திய நூல் எது? சதுரகராதி
- பரணி என்பது யாது? 'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி' - அதாவது, போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது.
- தமிழின் முதல் பரணி நூல் எது? கலிங்கத்துப் பரணி.
- கலிங்கத்துப் பரணி எனும் நூலை எழுதியவர் யார்? செயங்கொண்டார்
- 'வாயில் இலக்கியம்' அல்லது 'சந்து இலக்கியம்' என்று அழைக்கப்படும் இலக்கிய வகை எது? தூது இலக்கியம்
- பல்வேறு வகையான பாக்களும், உறுப்புகளும் கலந்து பாடப்படும் நூல் எது? கலம்பகம்
- முதன் முதல் எழுந்த கலம்பக நூல் எது? நந்திக் கலகம்பகம் (மூன்றாம் நந்திவர்ம மன்னன் மீது பாடப்பட்டது.)
- குற்றால நாதரின் புகழை விஞ்சிப்பாடப்படும் நூல் எது? திருக்குற்றாலக் குறவஞ்சி.
- திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்? திரிகூட ராசப்பக் கவிராயர்.
- 'மருள் நீக்கியார்' எனும் இயற்பெயர் கொண்ட பக்தி இலக்கியப் புலவர் யார்? திருநாவுக்கரசர்
- சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் யார்? நம்பியாண்டார் நம்பி (முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் திருஞான சம்பந்தர்)
- வைணவ சமய ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் எது? நாலாயிர திவ்ய பிரபந்தம்
- நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்? நாதமுனிகள் (இந்நூல் 'திராவிட வேதம்' என்றும் அழைக்கப்படுகிறது.)
- 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' எனப் போற்றப்படும் நூலைப் பாடியவர் யார்? மாணிக்கவாசகர்
- தேவாரம் என்பது யார் யாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்? திருநாவுக்கரசன், திருஞானசம்பந்தர், சுந்தரர்
- 157 புலவர்களால் பாடப்பட்ட, ஔவையாரால் அதிக பாடல்கள் பாடப்பட்ட நூல் எது? புறநானூறு
- புறநானூறு எனும் சங்க நூலை முதன் முதல் பதிப்பித்தவர் யார்? உ.வே. சாமிநாதையர் (1894)
- ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், மலரும் மாலையும், உமர் கையாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச செல்வம் எனும் நூல்களின் ஆசிரியர் யார்? 'குழந்தைக் கவிஞர்' கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- உலக தாய்மொழித்தினம் ஒவ்வொரு வருடமும் எத்தனையாம் திகதி கொண்டாடப்படுகிறது? பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி
- எட்வின் அர்னால்ட் எனும் ஆங்கிலக் கவிஞரால் எழுதப்பட்ட 'லைட் ஒப் ஆசியா' எனும் நூலைத் தழுவி, தமிழில் எழுதப்பட்ட நூல் எது? ஆசிய ஜோதி
- 'செந்நாப்போதார்' என்று அழைக்கப்படும் புலவர் யார்? திருவள்ளுவர்
- ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் எந்த சமயத்தைச் சேர்ந்தவை? சமண சமய சார்புடையவை.
- ஐஞ்சிறு காப்பியங்களும் எவை? உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி
- சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்
- சிலப்பதிகாரத்தில் மொத்தம் எத்தனை பாடல் அடிகள் உள்ளன? 5001
- சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 30 காதைகள்
- சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டுள்ள பாவகை எது? நிலைமண்டில ஆசிரியப்பா
- சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? 3
- புகார் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 10
- வஞ்சிக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 7
- மதுரைக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 13
- தமிழ் மொழியின் முதல் காப்பியம் எது? சிலப்பதிகாரம்
- இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை எவை? சிலப்பதிகாரம். மணிமேகலை
- ஐம்பெருங் காப்பியங்களில் பௌத்த சமய சார்புடைய நூல்கள் எவை? மணிமேகலை, குண்டலகேசி
- சிலப்பதிகாரத்தின் நாயகி (தலைவி) யார்? கண்ணகி
- திருக்குறள் எந்த வகை நூல்களில் ஒன்றாகும்? பதினெண் கீழ்க்கணக்கு
- திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை? 133
- திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யு. போப்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்? மணக்குடவர்
- 'சீறா' என்பது எந்த அறபுச் சொல்லின் திரிபாகும்? சீறத்
- சீறாப்புராணத்தை எழுதிய புலவர் யார்? உமறுப்புலவர்
- சீறாப்புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? 3
- சீறாப்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன? 92
- சீறாப்புராணம் எத்தனை விருத்தப்பாக்களைக் கொண்டுள்ளது? 5027
- சீறாப்புராணத்தின் மூன்று காண்டங்களும் எவை? விலாதத்துக் காண்டம் (24 படலங்கள்), நுபுவ்வத்துக் காண்டம் (21 படலங்கள்), ஹிஜ்ரத்துக் காண்டம் (47 படலங்கள்)
- சீறாப்புராணத்திற்குப் பிறகு வந்த, பனூ அஹ்மது மரைக்கார் என்பவரால் பாடப்பட்ட நூலின் பெயர் என்ன? சின்னச் சீறா
- சின்னச் சீறா எத்தனை பாடல்களைக் கொண்டமைந்துள்ளது? 2145
- உமறுப்புலவர் அவர்களால் பாடப்பட்ட மற்றொரு நூலின் பெயரைக் குறிப்பிடுக. - முதுமொழி மாலை
- புத்தரது ஆதி வேதம், புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்களை எழுதியவர் யார்? அயோத்திதாசப் புலவர்
- முதல் ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படும்? தேவாரம்
- மூவர் முதலிகள் என அழைக்கப்படுவோர் யாவர்? திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
- சமயக்குரவர்கள் என அழைக்கப்படுவோர் யாவர்? திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
- பன்னிரு திருமுறைகளையும் பாடியோர் யாவர்? திருஞானசம்பந்தர் (1 -3), திருநாவுக்கரசர் (4-6), சுந்தரர் (7), மாணிக்கவாசகர் (8), திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர் (9), திருமூலம் (10), திருஆலவாய் உடையார் முதலிய 12 பேர் (11), சேக்கிழார் (12)
- கலித்தொகை எனும் சங்க நூலில் கடவுள் வாழ்த்தைப் பாடியவரும், அந்நூலைத் தொகுத்தவரும் யார்? நல்லந்துவனார்
- கலித்தொகை எவ்வாறு சிறப்பித்துப் பேசப்படுகிறது? 'கற்றறிந்தார் ஏத்தும் கலி'
- கலித்தொகையில் பாலையைப் பாடிய புலவர் யார்? பெருங்கடுங்கோ
- கலித்தொகையில் குறிஞ்சியைப் பாடிய புலவர் யார்? கபிலர்
- கலித்தொகையில் முல்லையைப் பாடிய புலவர் யார்? நல்லுருத்திரனார்
- கலித்தொகையில் மருதத்தைப் பாடிய புலவர் யார்? மருதனிளநாகனார்
- கலித்தொகையில் நெய்தலைப் பாடிய புலவர் யார்? நல்லந்துவனார்
- 'நெடுந்தொகை' என்ற பெயர் கொண்ட சங்க இலக்கிய நூல் எது? அகநானூறு
- அகநானூறிலுள்ள சிற்றெல்லைகள் எத்தனை? பேரெல்லைகள் எத்தனை? 13, 31
- தமிழின் முதல் விருத்த காப்பியம் எது? சீவக சிந்தாமணி
- தமிழின்முதல் கள ஆய்வு நூல் எது? பெரிய புராணம்
- மனோன்மணியம் எனும் நூலின் ஆசிரியர் யார்? சுந்தரம்பிள்ளை
🌺 THAMILSHSHUDAR
முகப்பு
மொழியறிவு
வினா-விடைகள்
கவிதைகள்
வினாப்பத்திரங்கள்
சிங்களம்
என்னைப்பற்றி
🎥 YouTube
📝 Blog
📱 WhatsApp
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
திங்கள், 23 பிப்ரவரி, 2026
தமிழறிவு வினா - விடை | தமிழ்மொழித் தின விழா
Labels:
தமிழ்மொழித் தின விழா,
தமிழறிவு வினா - விடை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days