தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன
அ - எட்டு
ஆ - பசு
இ - அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ - கொடு, பறக்கும் பூச்சி
உ - சிவன்
ஊ - தசை, இறைச்சி
எ - வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ - அம்பு
ஐ - ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஒ - ஒழிவு
ஓ - வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
ஒள - பூமி, ஆனந்தம்
கா - சோலை, காத்தல்
கூ - பூமி, கூவுதல்
கு - இருள்
கை - கரம், உறுப்பு
கோ - அரசன், தலைவன், இறைவன்
சா - இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ - இகழ்ச்சி, திருமகள்
சே - எருது, அழிஞ்சில் மரம்
சோ - மதில்
தா - கொடு, கேட்பது
தீ - நெருப்பு
து - கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ - வெண்மை, தூய்மை
தே - நாயகன், தெய்வம்
தை - மாதம்
ஞா - பொருத்து, கட்டு
நா - நாக்கு
நீ - நின்னை
நே - அன்பு, நேயம்
நை - வருந்து, நைதல்
நொ - நொண்டி, துன்பம்
நோ - நோவு, வருத்தம்
நௌ - மரக்கலம்
பா - பாட்டு, நிழல், அழகு
பூ - மலர்
பே - மேகம், நுரை, அழகு
பை - பாம்புப் படம், பசுமை, உறை
போ - செல்
ம - சந்திரன், எமன்
மா - மாமரம், பெரிய, விலங்கு
மீ - ஆகாயம், மேலே, உயரம்
மு - மூப்பு
மூ - மூன்று
மே - மேன்மை, மேல்
மை - அஞ்சனம், கண்மை, இருள்
மோ - முகர்தல், மோதல்
யா - அகலம், மரம்
வா - அழைத்தல்
வீ - பறவை, பூ, அழகு
வை - வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ - கௌவுதல், கொள்ளை அடித்தல்
ள - தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக