📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 30 டிசம்பர், 2024

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 2

  பின்வரும் பந்தியை வாசிக்க.

            மனிதனும் ஓர் இயற்கை. இயற்கையோடு தொடர்பு கொள்ளும்போது மனிதன் ஆற்றல் பெறுகிறான். இயற்கையோடு இணைந்து வாழ்பவருக்கு இயற்கையானது அறிவாகவோ, ஆற்றலாகவோ, செல்வமாகவோ தன்னை வாரி வழங்குகின்றது. இயற்கையை நேசிப்பவர்களிடம் அன்பு மிகுதியாகும். உள்ளத்தில் அழகு பெருக்கெடுக்கும். ஆர்வம் துளிர்விடும். மகிழ்ச்சி பன்மடங்காகும். புதுமை

சனி, 28 டிசம்பர், 2024

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 1

பின்வரும் பந்தியை வாசிக்க.

           ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டு மக்களின் கல்வியிற் தங்கியுள்ளது. அத்தகைய பெருமையை ஈட்டிக் கொடுப்பதற்குக் காரணமாக அமையும் நூல்களை நாம் கண்களைப் போன்று பேணிக் காப்பது கடமையாகும். எனவே நூல் நிலையங்களில் உள்ள நூல்களைக் கிழிக்காமலும், சிதைக்காமலும் பக்குவமாகப் பயன்படுத்துவோம். 


01. கீழேயுள்ள வினாக்களுக்கு விடைகளை இப்பந்தியில் இருந்து தெரிவுசெய்து எழுதுக.

1. ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டு மக்களின் எதில் தங்கியுள்ளது?

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் எது?

 

ஐயம் - 3

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் எது? அந்த அடிகளை இயற்றியவர் யார்? அந்த அடி இடம்பெறும் கவிதையின் தலைப்பு யாது?

தௌிவு

-----------

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் 'பாரதியார் கவிதைகள்' ஆகும். அந்த அடி கொண்ட செய்யுளை இயற்றியவர் பாரதியார் ஆவார். 

பாரதியாரின் தேசிய கீதங்களில் ஒன்றான 'பாரத சமுதாயம்' எனும் தலைப்பிலான கவிதையிலேயே இவ்வடி இடம்பெற்றுள்ளதைக்

வெள்ளி, 27 டிசம்பர், 2024

'ஆவாகனம்' என்றால் என்ன? விளக்குக.

ஐயம் -2

ஆவாகனம் என்ற சொல்லுக்கு பிழையான விளக்கமே இதுவரைக் காலமும் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பரீட்சை வினாத்தாள்களிலும் பிழையான விடைகளே  வழங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக யாரேனும் மிகச் சிறந்த விளக்கத்தினை வழங்க முடியுமாயின் வழங்கலாம்.

தௌிவு

-----------

 ‘ஆவாகனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

தசாப்தம் எனும் சொல்லில் ப் எனும் மெய்யுடன் பிற மெய் வந்துள்ளமைக்கான விளக்கம்


ஐயம்  - 1

க், ச், த், ப் எனும் 4 மெய்களும் உடநிலை மெய்மயக்கமாக மாத்திரமே வரும் என்பது நியதியல்லவா? அவ்வாறெனில் தசாப்தம் எனும் சொல்லில் ப் எனும் மெய்யுடன் பிற மெய் வந்துள்ளமைக்கான விளக்கம் தர முடியுமா?

தௌிவு

ஆம். (ர், ழ் தவிர்ந்த ஏனைய பதினாறு மெய்களில்) க், ச், த், ப் எனும் நான்கு மெய்களும் தம்மோடு தாம் மாத்திரம் மயங்கும் என்கிறது இலக்கண

சேர்த்தெழுதுதல்.


1. அடி + சுவடு = 

2.  ஆறு + மலை =

3. ஐந்து + ஐந்து = 

4. ஐந்து + புலம் =

5. ஒன்று + ஊர் =

6. ஒன்று + ஒன்று =