📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 18 மார்ச், 2025

உவமைத் தொடர்கள் அகர வரிசையில்

நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி. அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.

  1. அத்தி பூத்தாற்போல் - எப்போதாவது 
  2. அச்சில்லா தேர்போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை 
  3.  அனலில் இட்டமெழுகுபோல் - துன்பத்தால் மனம் உருகுதல்
  4. அணை கடந்த வெள்ளம் போல - கட்டுக் கடங்காதபோது 
  5. ஆனை வாய் அகப்பட்ட கரும்பு போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை 
  6. ஆழ்கடல் முத்துப்  போல - பெறுமதி மிக்கது 
  7. ஆடி ஓய்ந்த பம்பரம் போல - ஓய்ந்து போதல் 
  8. இலைமறை  காய்போல் - ஆற்றல் வெளிப்படாமல் இருத்தல்
  9. இலவு காத்த கிளிபோல் - காத்திருந்து ஏமாறுதல் 
  10. இரண்டு தோணியிற் கால் வைத்தாற்போல் - செய்யமுடியாது இருத்தல் 
  11. இடியோசை கேட்ட நாகம் போல - பயப்படல்
  12. உள்ளங்கை நெல்லிக் கனி போல் - கவனமாக வைத்திருத்தல் 
  13. ஊமை கண்ட கனவு போல்  - கூற முடியாத நிலையில் இருத்தல் 
  14. ஒரு தாய் வயிற்று பிள்ளை போல் - ஒற்றுமை 
  15. ஓடும் புளியம் பழமும் போல - ஒட்டுறவின்றி இணைந்திருத்தல் 
  16. கலங்கரை விளக்கம் போல் -  உதவல் 
  17. கடன்பட்டார் நெஞ்சம் போல் - மனம் கலக்கம் அடைதல் 
  18. கனியிருக்க காய் கவருவது போல - நல்லவற்ற்றை வெறுத்து தீயவற்றை நாடுதல்
  19. காட்டுத் தீபோல் - ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்
  20. கிணற்றுத் தவளை போல - வெளியுலகம் தெரியாதிருத்தல் 
  21. கீரியும் பாம்பும் போல்  - எப்போதும் பகை உணர்ச்சி
  22. குரங்கின் கைப் பூமாலை போல - சேதமடைதல் 
  23. குன்றின் மேல் விளக்குப்போல் - எல்லோரினாலும் அறியப்படட திறமை
  24. கொழு கொம்பற்ற கோடி போல - ஆதாரமற்று நிற்றல் 
  25. சிவபூசையில் கரடி புகுந்தது போல - நன்மைக்கு இடையூறு  
  26. சிலை மேல் எழுதுப்போல் - மனதில் அழியாமல் பதிந்திருத்தல்
  27. சித்திரப் பதுமை போல - அடக்கமாய் இருத்தல்  
  28. சூரியனைக்கண்ட பனி போல் - பெருந்துன்பம் நீங்குதல்
  29. செவிடன் காதிற் சங்கு ஊதியது போல - பயனற்ற முயற்சி 
  30. தலையிருக்க வால் ஆடுவது போல - உரியவரை மீறி சார்ந்திருப்பவர் முன்னிற்பது   
  31. தூண்டிலில்  அகப்பட்ட மீன் போல - துன்பப்படல் 
  32. நகமும் சதையும் போல் - ஒட்டி உறவாக இருத்தல் 
  33. நீர் மேல் எழுத்துப் போல - நிலையில்லாமை 
  34. நுனிப் புல்  மேய்ந்தாற்  போல - மேலோட்டமாகச் செய்தல் 
  35. பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் - பசுமை
  36. பசுத்தோல் போர்த்திய புலி - நல்லவன் போல் நடித்தல்
  37. மலரும் மணமும் போல் - பிரியாமல் சேர்திருத்தல்
  38. மதில் மேற் பூனை போல - தீர்கமான முடிவு எடுக்க முடியாதிருத்தல் 
  39. வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தாற் போல - நன்றி மறத்தல் 
  40. வெள்ளிடை மலை போல் - தெட்டத்தெளிவு 
  41. வேலியே பயிரை மேய்ந்தாற் போல - பாதுகாப்பு இன்மை 
  42. வைக்கோல் போர் நாய் போல - தானும் அனுபவியாது பிறரையும் தடுத்தல்.
#education #tamil #australia #india #srilanka #tamillanguage and #literature #thamilshshudar #kalaimahanfairooz

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக