📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 17 செப்டம்பர், 2025

முஸ்லிம்களின் நூல் நிலையங்கள் - எம்.பீ.எம். ஜெலீல் | தமிழ்ச்சுடர்

 முஸ்லிம்களின் நூல் நிலையங்கள்

    மனிதனிடம் எதையும் சிந்திக்கும் சிந்தனா சக்தி உண்டு. பகுத்தறிவற்ற விலங்கினங்களுக்கு அந்த சக்தி இல்லை. இது கடவுள் நியதி. மனிதன் பாரில் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடைய சிந்தனா சக்தி காலத்திற்குக் காலம் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த சிந்தனா சக்தியின் மேன்மையிற்றான் இன்று றஷியர்கள் சந்திர மண்டலத்தில் கூட தங்கள் நாட்டின் சின்னத்தைப் பொறித்துள்ளார்கள். 

திங்கள், 15 செப்டம்பர், 2025

பாரதிதாசனின் ‘புத்தகசாலை’ கவிதையின் ஆழம் | THAMILSH SHUDAR

🖋️ தமிழும் நானும் – பாரதிதாசன்: வாசிப்பின் வழியே வெளிப்படும் உலகம்

– தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்


வாசிப்பு என்பது வாழ்க்கையின் இரண்டாம் உயிர் என்று கூறலாம். இவ்வுலகில் மனிதன் தனிமையில் தான் பேசிக்கொள்ளும் மிகச் சிறந்த தோழன் புத்தகமே. பாரதிதாசன் தனது "புத்தகசாலை" எனும் பாடலின் வாயிலாக இந்த உண்மையை மிக அழகாகவும், ஆழமாகவும் சொல்கிறார்.

அந்தப் பாடல், வெறும் வாசிப்பைப் பற்றி அல்ல; அது ஒரு மனிதனின் உள்ளாழ்ந்த பயணத்தையும், புத்தகங்கள் வழியாக

புதன், 10 செப்டம்பர், 2025

சங்க காலம் – ஒரு சிறு பார்வை | கலைமகன் பைரூஸ்

சங்க காலம் – ஒரு சிறு பார்வை

தமிழின் வரலாற்றுச் சுவடுகளில் மின்னும் பொற்காலம் “சங்க காலம்” எனப்படும். தமிழர் பண்பாட்டின் பூர்வீக ஒளியாகவும், இலக்கியச் செல்வத்தின் மூலாதாரமாகவும் சங்க யுகம் விளங்குகிறது. இக்காலம் கிட்டத்தட்ட கிமு 500 முதல் கிபி 300 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக புலவர்கள் கருதுகின்றனர். மொழி, இலக்கியம், அரசியல், சமூகம், பண்பாடு, தத்துவம் – எல்லா துறைகளிலும் சங்க காலம் தமிழர்களின் தனித்துவத்தையும் உயர்வையும் பறைசாற்றுகிறது.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

பாரதிதாசனின் 'புத்தகசாலை' விரிவான விளக்கம்.... | கலைமகன் பைரூஸ் | THAMILSH SHUDAR

📚 பாரதிதாசனின் 'புத்தகசாலை' விரிவான விளக்கம்

மாணாக்கர்களுக்கும், தமிழன்புள்ளோர் மனதுக்கும் நெருக்கமாக இருப்பது போன்ற முறையில், பாரதிதாசனின் 'புத்தகசாலை' என்னும் கவிதையை இங்கு விரிவாக நம் பார்வைக்கு எடுத்துரைக்கப்போகிகிறேன்.

தமிழ்மொழி சார்ந்த ஆக்க இலக்கியங்களை எனது பாணியில் – எனது சிந்தனைகளை கலந்தழகு செய்து வழங்கி தமிழுக்கு அணிசெய்து வருவேன். தொடருங்கள், தமிழின் ஒளிக்கதிர்கள் உங்கள் உள்ளத்தில் பரவட்டும்!

- தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்


📝 முதலில் கவிதையைப் பார்ப்போம்…

தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளைதன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!

பாரதிதாசனின் 'தமிழும் நானும்' கவிதை விளக்கம் | கலைமகன் பைரூஸ்

🖋️ தமிழும் நானும் – பாரதிதாசன்: உயிரின் தமிழ்க் கவிதை

– தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

🔶 பாரதிதாசன் – தமிழுக்காகத் தீபமேற்றிய கவிஞர்

20ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர் பாரதிதாசன். அவரது இயற்பெயர் கண்ணப்பன் சுப்புரத்தினம் (K. Subburathinam). 1891 ஏப்ரல் 29 அன்று பாண்டிச்சேரி (தற்போது புதுச்சேரி)யில் பிறந்த இவர், பாரதியாரின் சிந்தனைகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்டு, "பாரதியின் தாசன்" என்ற உணர்வில் “பாரதிதாசன்” எனப் புகழ் பெற்றார்.

🔹 பாரதிதாசன் = பாரதிக்கு தாசன்

சனி, 2 ஆகஸ்ட், 2025

தரம் 2 தமிழ் விசேட செயற்றிட்டம் | தமிழ்ச்சுடர்

     தரம் 2 மாணவர்களுக்காக நீர்கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, தமிழ்மொழி சார்ந்த விசேட செயற்றிட்டம் இது.

    மாணவர்கள் கூடுதலான பயிற்சிகள் செய்து, தங்களைத் தரப்படுத்திக் கொள்ள இச்செயற்றிட்டம் (வினாப்பத்திரங்கள்) உதவும் என்பதில் சந்தேகமில்லை. 

   தரவிறக்குவதற்கு இங்கு சொடுக்கவும். 

தரம் 10 - 11 தமிழ் இலக்கியத் தொகுப்புக்கான பாடக் காணொளிகள் | THAMILSH SHUDAR

     தரம் 10 - 11 மாணாக்கருக்கான தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள பாட அலகுகளுக்கான காணொளிகளை கீழ்வரும் இணைப்புகளினூடாகக் காண முடியும். 

    இந்த தமிழ்ச்சுடர் யூரியுப் தளத்திற்குச் சென்று, அந்தக் காணௌிகளைப் பார்ப்பதோடு, தளத்தை 'ஸப்ஸ்கிரைப்' செய்வதற்கும் மறக்க வேண்டாம். 

பாடங்கள்

----------------

புதன், 30 ஜூலை, 2025

தரம் 3 தமிழ் வினாப்பத்திரம் | கணிப்பீடு

Thamilsh Shudar இனால் கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ்மொழி | தமிழ் இலக்கிய நயம்) வெளியிடப்படவுள்ளது. இன்று தரம் 3 வகுப்பிற்கான தமிழ்மொழி | மாகாணக் கல்வித் திணைக்களம் - கிழக்கு மாகாணம் .
மாணவர்களின் ஆற்றலை இற்றைப்படுத்துவதற்கும், மேலதிக பயிற்சிகளைச் செய்வதற்கும் இது உசாத்துணையாக இருக்கும். 

வினாப்பத்திரத்தைத் தரவிறக்குவதற்கு 

www.thamilshshudar.com

செவ்வாய், 29 ஜூலை, 2025

இந்த நிலை மாறுமா? Hafiz Issadeen

வழக்கமாக தனது பிள்ளைகளின் கல்வி விவகாரங்கள் தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்கும் ஓர் இளம் தாய், எனக்கு அழைப்பு எடுத்திருந்தார். 

"ஸல்மா இப்போ நாலாம் வகுப்பு படிக்கிறா. அடுத்த வருஷம் ஸ்கொலர்ஷிப் பரீட்சை எழுத வேணுமே. ஆனால் அவ ஸ்கூல் விட்டு வந்து சாப்பிட்டதும் தூங்கப் பார்க்கிறா. டியூஷன்  வகுப்புக்குப் போக முடியாது என அடம் பிடிக்கிறா. இது தினமும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" என்றார் அந்தப் பெண்.  

"அவ சின்னப் பிள்ளை. அவக்கு ஓய்வும் வேண்டுமே. அவ நன்றாக படிக்கிறா தானே. ஏன் இப்படி வற்புறுத்தி இந்த நேரத்தில் டியூஷன் வகுப்புக்கு அனுப்புறீங்க?" என்று கேட்டேன்.

சனி, 26 ஜூலை, 2025

இன்றைய சொல் – Today's Word

Word: Compassion

Meaning (தமிழில்): இரக்கம்

Example: Show compassion to the poor.

உதாரணம்: ஏழைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.

வெள்ளி, 25 ஜூலை, 2025

தமிழ் ஆண்டுகள் | Thamilsh Shudar

ஆண்டுகளும் அவற்றின் சிறப்புப் பெயர்களும்

ஆண்டுகளும் அவற்றின் சிறப்புப் பெயர்களும்

ஆண்டு விழா பெயர்
முதல் ஆண்டுகாகித விழா
இரண்டாம் ஆண்டுபருத்தி விழா
மூன்றாம் ஆண்டுதோல் விழா
நான்காம் ஆண்டுமலர், பழ விழா
ஐந்தாம் ஆண்டுமர விழா
ஆறாம் ஆண்டுசர்க்கரை, கற்கண்டு விழா
ஏழாம் ஆண்டுகம்பளி, செம்பு விழா
எட்டாம் ஆண்டுவெண்கல விழா
ஒன்பதாம் ஆண்டுமண்கலச விழா
பத்தாம் ஆண்டுதகரம், அலுமினியம் விழா
பதினோறாம் ஆண்டுஇரும்பு விழா
பன்னிரண்டாம் ஆண்டுலினன் விழா
பதிமூன்றாம் ஆண்டுமின்னல் விழா
பதினான்காம் ஆண்டுதந்த விழா
பதினைந்தாம் ஆண்டுபடிக விழா

வருகிறது விடைப்பொதிகை | Tamil Knowledge Quiz

விடைப்பொதிகை | Tamil Knowledge Quiz

விடைப்பொதிகை – தமிழ் அறிவு வினா விடைகள்

இங்கு தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு, மற்றும் தமிழரின் உலகளாவிய விஷயங்களைத் தொடுவதற்கான அறிவுப் புதிர்கள் தொகுக்கப்படுகின்றன. தினமும் புதுப்பிக்கப்படும்!

1. ‘பட்டினத்தார்’ என்று அறியப்பட்ட சித்தர் யார்?
வீரமாமுனிவர்
2. ‘திருக்குறள்’ எத்தனை குறள்களை கொண்டது?
1330
3. சங்க காலத்தில் பரிபாடல் என்ன வகை இலக்கியம்?
பத்துப்பாட்டு வகையைச் சேர்ந்தது.

தொடர்ந்து புதுப்பிக்கப்படும்... மேலும் பகுதியுடன் விரைவில் சந்திப்போம்!


- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

வியாழன், 24 ஜூலை, 2025

பரீட்சார்த்தப் பதிவு

Quiz with Click for Answer

தமிழறிவு வினா – விடை

1. தமிழில் முதல் நூல் எது?
தொல்காப்பியம்
2. திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
3. 'ஐம்பெரும் காவியங்கள்' என்றால் என்ன?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி

இலக்கணைத் தொடர்கள் (மரபுத் தொடர்கள்) - 2 | THAMILSH SHUDAR

இலக்கணைத் தொடர்கள் - 2

கழுத்துப் பற்றிய இலக்கணைத் தொடர்கள்

  • கழுத்தறுத்தல் பெரும் துன்பத்த்திற்கு உள்ளாக்குதல். / தீமை செய்தல்
  • கழுத்திற் கட்டுதல் வலிந்து பொறுப்பாளியாக்குதல்
  • கழுத்துக் கொடுத்தல் தன் வருத்தம் பாராமல் பிறர் காரியத்தை ஏற்று நிற்றல் / வாழ்க்கைப்படுதல்
  • கழுத்து முறித்தல் வருத்துதல் / நிர்ப்பந்தித்தல்
  • கழுத்தைக் கட்டுதல் விடாது நெருக்குதல்