📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 20 ஜனவரி, 2026

போதைப் பொருள் வியாபாரமும் அதன் விபரீதங்களும்

இன்றைய உலகில் சமூகத்தின் அடித்தளத்தையே குலைக்கும் பெரும் சவாலாக போதைப் பொருள் வியாபாரம் உருவெடுத்துள்ளது. இது ஒருவரின் உடல்நலத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பம், சமூகம், நாட்டின் எதிர்காலம் ஆகிய அனைத்தையும் ஆபத்துக்குள் தள்ளுகிறது. பண லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும்

சனி, 17 ஜனவரி, 2026

ஒருசொல் பன்மொழி

ஒருசொல் பன்மொழி – (பாடத்திற்குரிய முக்கிய சொற்கள்)

ஒருசொல் பன்மொழி என்பது ஒரு சொல்லுக்குப் பல சமமான பொருள் தரும் சொற்கள் ஆகும். தரம் 4 முதல் தரம் 13 வரையிலான மாணாக்கருக்குப் பயன்படும் முக்கிய சொற்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

விலங்குகளின் ஒலிமரபு | றபீக் மொஹிடீன்

தொனிமரபு / ஒலிமரபு தொடர்பாக நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். மரபு என்பது தொன்றுதொட்டு வருவதைக் குறிக்கும்.  அன்றைய தமிழ் மக்கள் அன்றைய காலம் தொட்டு உலக உயிர்களின் ஒலிகளுக்கு  எவ்வாறு பெயர் குறிப்பிட்டார்களோ   

புதன், 14 ஜனவரி, 2026

தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் | முன்னோடிப் பரீட்சை 1

 

Thamilsh Shudar இனால் கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ்மொழி | தமிழ் இலக்கிய நயம்) வெளியிடப்படவுள்ளது. இன்று தரம் 10 வகுப்பிற்கான தமிழ்மொழியும் இலக்கியமும் பாடப் பகுதியிலிருந்து முதலாம் தவணைக்கு ஏற்றாற் போன்ற மாதிரி

வெள்ளி, 19 டிசம்பர், 2025

தமிழ் மொழி: சங்க காலத்திலிருந்து உலகத் தளத்துக்கு

முன்னுரை

உலகில் தொடர்ச்சியாகப் பேசப்படும் மிகப் பழமையான மொழிகளில் தமிழுக்குத் தனித்துவமான இடம் உண்டு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கும் மொழியாக, இலக்கியம், பண்பாடு, சிந்தனை, அறிவியல், ஆன்மீகம் எனப் பல தளங்களில் தமிழின் பங்களிப்பு

சனி, 22 நவம்பர், 2025

தேநீர் எனும் சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்? - படிக்க வேண்டிய அருமந்த கட்டுரை

எனது அன்புத் தமிழ் 'தமிழ்ச்சுடர்' உறவுகளுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும்.  வணக்கம்!

நான் நேசிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியர்களில் ஒருவர் திருமிகு. றபீக் மொஹிதீன் ஆசிரியர் அவர்கள். 

புதன், 17 செப்டம்பர், 2025

முஸ்லிம்களின் நூல் நிலையங்கள் - எம்.பீ.எம். ஜெலீல் | தமிழ்ச்சுடர்

 முஸ்லிம்களின் நூல் நிலையங்கள்

    மனிதனிடம் எதையும் சிந்திக்கும் சிந்தனா சக்தி உண்டு. பகுத்தறிவற்ற விலங்கினங்களுக்கு அந்த சக்தி இல்லை. இது கடவுள் நியதி. மனிதன் பாரில் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடைய சிந்தனா சக்தி காலத்திற்குக் காலம் வளர்பிறை போல் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த சிந்தனா சக்தியின் மேன்மையிற்றான் இன்று றஷியர்கள் சந்திர மண்டலத்தில் கூட தங்கள் நாட்டின் சின்னத்தைப் பொறித்துள்ளார்கள். 

திங்கள், 15 செப்டம்பர், 2025

பாரதிதாசனின் ‘புத்தகசாலை’ கவிதையின் ஆழம் | THAMILSH SHUDAR

🖋️ தமிழும் நானும் – பாரதிதாசன்: வாசிப்பின் வழியே வெளிப்படும் உலகம்

– தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்


வாசிப்பு என்பது வாழ்க்கையின் இரண்டாம் உயிர் என்று கூறலாம். இவ்வுலகில் மனிதன் தனிமையில் தான் பேசிக்கொள்ளும் மிகச் சிறந்த தோழன் புத்தகமே. பாரதிதாசன் தனது "புத்தகசாலை" எனும் பாடலின் வாயிலாக இந்த உண்மையை மிக அழகாகவும், ஆழமாகவும் சொல்கிறார்.

அந்தப் பாடல், வெறும் வாசிப்பைப் பற்றி அல்ல; அது ஒரு மனிதனின் உள்ளாழ்ந்த பயணத்தையும், புத்தகங்கள் வழியாக

புதன், 10 செப்டம்பர், 2025

சங்க காலம் – ஒரு சிறு பார்வை | கலைமகன் பைரூஸ்

சங்க காலம் – ஒரு சிறு பார்வை

தமிழின் வரலாற்றுச் சுவடுகளில் மின்னும் பொற்காலம் “சங்க காலம்” எனப்படும். தமிழர் பண்பாட்டின் பூர்வீக ஒளியாகவும், இலக்கியச் செல்வத்தின் மூலாதாரமாகவும் சங்க யுகம் விளங்குகிறது. இக்காலம் கிட்டத்தட்ட கிமு 500 முதல் கிபி 300 வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக புலவர்கள் கருதுகின்றனர். மொழி, இலக்கியம், அரசியல், சமூகம், பண்பாடு, தத்துவம் – எல்லா துறைகளிலும் சங்க காலம் தமிழர்களின் தனித்துவத்தையும் உயர்வையும் பறைசாற்றுகிறது.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

பாரதிதாசனின் 'புத்தகசாலை' விரிவான விளக்கம்.... | கலைமகன் பைரூஸ் | THAMILSH SHUDAR

📚 பாரதிதாசனின் 'புத்தகசாலை' விரிவான விளக்கம்

மாணாக்கர்களுக்கும், தமிழன்புள்ளோர் மனதுக்கும் நெருக்கமாக இருப்பது போன்ற முறையில், பாரதிதாசனின் 'புத்தகசாலை' என்னும் கவிதையை இங்கு விரிவாக நம் பார்வைக்கு எடுத்துரைக்கப்போகிகிறேன்.

தமிழ்மொழி சார்ந்த ஆக்க இலக்கியங்களை எனது பாணியில் – எனது சிந்தனைகளை கலந்தழகு செய்து வழங்கி தமிழுக்கு அணிசெய்து வருவேன். தொடருங்கள், தமிழின் ஒளிக்கதிர்கள் உங்கள் உள்ளத்தில் பரவட்டும்!

- தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்


📝 முதலில் கவிதையைப் பார்ப்போம்…

தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளைதன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!

பாரதிதாசனின் 'தமிழும் நானும்' கவிதை விளக்கம் | கலைமகன் பைரூஸ்

🖋️ தமிழும் நானும் – பாரதிதாசன்: உயிரின் தமிழ்க் கவிதை

– தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

🔶 பாரதிதாசன் – தமிழுக்காகத் தீபமேற்றிய கவிஞர்

20ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர் பாரதிதாசன். அவரது இயற்பெயர் கண்ணப்பன் சுப்புரத்தினம் (K. Subburathinam). 1891 ஏப்ரல் 29 அன்று பாண்டிச்சேரி (தற்போது புதுச்சேரி)யில் பிறந்த இவர், பாரதியாரின் சிந்தனைகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்டு, "பாரதியின் தாசன்" என்ற உணர்வில் “பாரதிதாசன்” எனப் புகழ் பெற்றார்.

🔹 பாரதிதாசன் = பாரதிக்கு தாசன்

சனி, 2 ஆகஸ்ட், 2025

தரம் 2 தமிழ் விசேட செயற்றிட்டம் | தமிழ்ச்சுடர்

     தரம் 2 மாணவர்களுக்காக நீர்கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, தமிழ்மொழி சார்ந்த விசேட செயற்றிட்டம் இது.

    மாணவர்கள் கூடுதலான பயிற்சிகள் செய்து, தங்களைத் தரப்படுத்திக் கொள்ள இச்செயற்றிட்டம் (வினாப்பத்திரங்கள்) உதவும் என்பதில் சந்தேகமில்லை. 

   தரவிறக்குவதற்கு இங்கு சொடுக்கவும். 

தரம் 10 - 11 தமிழ் இலக்கியத் தொகுப்புக்கான பாடக் காணொளிகள் | THAMILSH SHUDAR

     தரம் 10 - 11 மாணாக்கருக்கான தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள பாட அலகுகளுக்கான காணொளிகளை கீழ்வரும் இணைப்புகளினூடாகக் காண முடியும். 

    இந்த தமிழ்ச்சுடர் யூரியுப் தளத்திற்குச் சென்று, அந்தக் காணௌிகளைப் பார்ப்பதோடு, தளத்தை 'ஸப்ஸ்கிரைப்' செய்வதற்கும் மறக்க வேண்டாம். 

பாடங்கள்

----------------

புதன், 30 ஜூலை, 2025

தரம் 3 தமிழ் வினாப்பத்திரம் | கணிப்பீடு

Thamilsh Shudar இனால் கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ்மொழி | தமிழ் இலக்கிய நயம்) வெளியிடப்படவுள்ளது. இன்று தரம் 3 வகுப்பிற்கான தமிழ்மொழி | மாகாணக் கல்வித் திணைக்களம் - கிழக்கு மாகாணம் .
மாணவர்களின் ஆற்றலை இற்றைப்படுத்துவதற்கும், மேலதிக பயிற்சிகளைச் செய்வதற்கும் இது உசாத்துணையாக இருக்கும். 

வினாப்பத்திரத்தைத் தரவிறக்குவதற்கு 

www.thamilshshudar.com

செவ்வாய், 29 ஜூலை, 2025

இந்த நிலை மாறுமா? Hafiz Issadeen

வழக்கமாக தனது பிள்ளைகளின் கல்வி விவகாரங்கள் தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்கும் ஓர் இளம் தாய், எனக்கு அழைப்பு எடுத்திருந்தார். 

"ஸல்மா இப்போ நாலாம் வகுப்பு படிக்கிறா. அடுத்த வருஷம் ஸ்கொலர்ஷிப் பரீட்சை எழுத வேணுமே. ஆனால் அவ ஸ்கூல் விட்டு வந்து சாப்பிட்டதும் தூங்கப் பார்க்கிறா. டியூஷன்  வகுப்புக்குப் போக முடியாது என அடம் பிடிக்கிறா. இது தினமும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" என்றார் அந்தப் பெண்.  

"அவ சின்னப் பிள்ளை. அவக்கு ஓய்வும் வேண்டுமே. அவ நன்றாக படிக்கிறா தானே. ஏன் இப்படி வற்புறுத்தி இந்த நேரத்தில் டியூஷன் வகுப்புக்கு அனுப்புறீங்க?" என்று கேட்டேன்.