📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி 4

9.மலைபடுகடாம்:

வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால்

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 3

ஆற்றுப்படை நூல்கள்:

புறப்பொருள் பற்றியவற்றுள் 5 ஆற்றுப்படை நூல்கள் ஆகும். அவை பற்றிக் குறிப்புகள் பின்வருமாறு:

6.சிறுபாணாற்றுப் படை:

இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின்

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 2

3.பட்டினப்பாலை:
பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது இப்பெயரின் பொருள். இங்குப் பட்டினம் என்பது புகார் நகர். 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 1

 பத்துப்பாட்டு நூல்கள் - பகுதி 1:

திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு.
பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றுண்டு. அது வருமாறு:-
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 3

5.பரிபாடல்:

எட்டுத்தொகையில் பரிபாடல் அகமும் புறமும் கலந்ததாகும். இந்நூல் பரிந்து செல்லும் ஓசையை உடையதாக அமைந்தது. பொதுவாகப் பரிபாடல் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் சால்புகளைக் கொண்டு அமைந்து வரும். பரிபாடல் 70 பாடல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் 22 பாக்களே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களில் முருகனுக்கும் வைகைக்கும் எட்டுப்பாக்கள் வீதமும் திருமாலுக்கு ஆறு பார்க்களும் என 22 பாக்கள் உள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 2

3. ஐங்குறுநூறு:

எட்டுத்தொகை நூல்களுள் அடிவரையறையில் குறைவான நூல். மூன்று முதல் ஐந்து அடிகளை எல்லையாகக் கொண்டது. திணைக்கு நூறு பாடல் விதம் 500 பாடல்களைக் கொண்டிலங்குகிறது. குறிஞ்சியைக் கபிலரும், முல்லைத்திணையைப் பேயனாரும், மருதத்திணையை ஓரம்போகியாரும், நெய்தல் திணையை அம்மூவனாரும், பாலைத் திணையை ஓதலாந்தையாரும் பாடியுள்ளனர்.

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 1

எட்டுத்தொகை இலக்கியம் எட்டு நூல்களை தன்னகத்தே கொண்டது. அவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பன அக நூல்கள். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்கள், பரிபாடல் அகமும் புறமும் இணைந்த நூலாகும்.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகப்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை”

சனி, 18 ஜனவரி, 2025

உவமைத் தொடர்கள் | அவற்றின் பொருள்கள் | உதாரணங்கள்

 உவமைத்தொடர்

நன்கு தெரிந்த பொருளை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையணியாகும். அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத்தொடர் ஆகும். 

இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன. 

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 3

பின்வரும் பந்தியை வாசிக்க.

            நீங்கள் எனக்கு எம் நாட்டில் இருக்கும் சித்திரக் குன்றமான சீகிரியா பற்றிக் கூறினீர்கள் அல்லவா? காசியப்பன் என்னும் அரசன் தனது பாதுகாப்பிற்காக மறைந்திருந்து வாழ்ந்த போது, அதனை அவன் ஓர் எழில் கொஞ்சும் குன்றாக்கினான் என்றீர்களே. ஆகா! எத்தனை அழகு! எத்தனை வியப்பான காட்சிகள்! நாம் கல்விச் சுற்றுலா சென்ற வேளை அங்கு போயிருந்தோம். தூரத்தில் நின்று பார்த்தபோது ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பது  போலக் காட்சியளித்தது.

வியாழன், 16 ஜனவரி, 2025

உயிர்க்குறிகள்

தமிழ் மொழியிலுள்ள உயிர்க்குறிகள் பற்றி தரம் 4, தரம் 5 மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள  வேண்டும். புலமைப் பரிசில் பரீட்சையில் உயிர்க்குறிகள் பற்றிய வினாக்களும் இடம்பெறுகின்றன. 

இங்கு உயிர்க்குறிகள் தொடர்பான அட்டவணை இற்றைப்படுத்தப்படுகின்றது.