📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 29 ஜனவரி, 2025

ஆனைக்கோட்டை முத்திரை :- ஒரு மீளாய்வு - வேள் நாகன்

சிந்துவெளி தமிழ் எழுத்து கிமு 2700 முதல்  கிமு  1700 ஆண்டு வரையில் வழங்கியது . அதன் பின் சிந்துவெளி நாகரிகம் அழிவுற்றாலும் சிந்துவெளி மக்களது மொழியான தமிழும் அதன்  எழுத்து முறையான சிந்து எழுத்தும் தென்னிந்திய, ஈழ பகுதியில் மேலும் பல நூற்றாண்டுகள் வழங்கி காலப்போக்கில் எளிமைப்பட்டு  அடையாளம் காணக்கூடிய அளவில் தமிழியாக மாறியது என்பதனை கி.மு 2000 செம்பியன் கண்டியூர் கற்கோடாரி , ஆனைக்கோட்டை முத்திரை ஆகியன விளங்குகின்றன. அந்த வகையிலான

செவ்வாய், 28 ஜனவரி, 2025

எதை வாசிப்பது?

வாசிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிகவும் தேவையான நூல்களை அவரவர் சிந்தித்து தேர்ந்தெடுத்து வாசிப்பது அவசியம். பிறர் நூல் வாங்குகிறார்கள் என்று நாம் வாங்குவது பின்னடைவு.

அது தமது நிகழ் கால வாழ்வியலுக்கும் எதிர்கால வெற்றிக்கும் பயன் தருவதை கருத்தில் கொள்ள வேண்டும். அது எந்த துறை சார்ந்த நூலாகவும் இருக்கலாம்.
கண்டத்தைப் படித்தால் பண்டிதன் ஆகலாம்

பழந்தமிழரும் இரும்பும்

இலக்கியச் சான்றுகள் :-

இற்றைக்கு 5200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் இரும்பினைப் பயன்படுத்தியிருப்பதும், தமிழர்களே இரும்பினை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்ற செய்தி வந்திருப்பதும் தெரிந்ததே! இந்த இரும்புப் பயன்பாடு பற்றிச் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என இப் பதிவில் பார்ப்போம். பழந்தமிழர் இரும்புத் தாதுக்களைச் சேகரித்துச் சிறிய களிமண் உலையில் தோல் துருத்தியின் உதவியால் இரும்பை உருக்கி வந்திருப்பதைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகின்றது. உலைக்கலன்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் கொடுமணலில் கிடைத்தள்ளன (முதலாவது படம் காண்க). இத்தகைய இரும்பு உலைகள் சூடான நிலையில் காணப்படுவதைப் பின்வரும் பாடல்வரிகள் காட்டுகின்றன.

தேங்காயெண்ணெய் என்பது சரிதானா?

தேங்காயெண்ணெய் என்பது பிழைதானே... என்றாலும்...?

தேங்காய் + எண்ணெய் = தேங்காயெண்யெண் என்று பலரும், நான்கூட இன்றுவரை சொல்லிவருவதே வழக்கமாக உள்ளது. என்றாலும் இவ்வாறு சொல்வதில் பிழையுள்ளது என்று ஆழ்மனதில் பல காலங்களாக வந்துபோகிறது. என்றாலும், ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்றாங்கு  தேங்காயெண்ணெய் என்றே சொல்லி வருகிறோம். 

கலைமகன் தனிப்பாடல்கள்

*எள்ளின்கண் ணெடுப்பாய் வந்ததுவே எண்ணெய்யாம்

மண்ணின்கண் மாந்தரெடுப் பதுதானே மண்ணெய்யே

எள்ளுந்தெங் குமிணைந்தின் றுதேங்காயெண் ணெய்யாமே

எடுத்துரைத்திடின் எடுப்பரென்மீ திழுக்குத்தான்*  

திங்கள், 27 ஜனவரி, 2025

தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil

  பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

நான் விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கின்றேன். ஒருநாள் வகுப்பாசிரியர் தினக்குறிப்பு எழுதும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எம்முடன் கலந்துரையாடினார். அத்துடன், மாதிரித் தினக்குறிப்பொன்றை எழுதவும் கற்றுக் கொடுத்தார். பின்னர் வீட்டு வேலையாக ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பை எழுதி வருமாறு கூறினார். அதற்கமைய வீட்டிலும், வௌியிலும் நான் பெற்ற அனுபவங்களை தினக்குறிப்பில் எழுதினேன். எழுதப்பட்ட ஒரு வாரத்திற்கான தினக்குறிப்பு சிறப்பான

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

சுவர்க்கத்துக்கு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 பற்றி அறிந்துகொள்வோம்

 

சுவர்க்கத்துக்கு நன்மாராயம் சொல்லப்பட்ட 10 பேரில் ஒரு சிலரை குறிப்பிடுக?

1=        அபூபக்கர் ரலி

2=        உஸ்மான் ரலி

3=        உமர் ரலி

4=        அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் ரலி

5=        ஸயீத் இப்னு ஸைத் ரலி

6=        ஷா இப்னு அபீவக்காஸ் ரலி

சனி, 25 ஜனவரி, 2025

ஒருதந்தையின்உண்மையான முகம் பற்றித் தெரிந்திருக்கிறீர்களா?

1- உங்கள் தந்தை உங்களைத் திட்டினாலும், அவர் உங்களை வெறுக்கமாட்டார்.

 2- அவர் உங்களுக்கு ஏதாவது ஒன்றில் அழுத்தம் கொடுத்தால், ​​அது உங்கள் நலனுக்காகவே இருக்கும்.

 3- நீங்கள் அவரை மெளனமாக  பார்த்தால், ​​அவர் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

இலக்கண வினாக்கள் | இலக்கண - பல்தேர்வு வினா விளக்கங்கள்

 தமிழ் இலக்கண வினாக்கள் - அவற்றிற்கான விடைகள் இங்கு இற்றைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தமிழ்மொழி ஆர்வலர்கள். ஏனையோருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தவும். 

உங்கள் வினாக்களையும் இங்கு வினவவும்.  

1. தன் வினையாகவும் பிற வினையாகவும் அமையும் சொல் பின்வருவனவற்றுள் எது? 1.எரி 2.உண்

இணைமொழிகள் எத்தனை வகைப்படும்?

ஓசைநயம் பற்றியும் பொருட் செறிவுடையனவாகவும் அமைந்து இரு சொற்கள் இணைந்து வருவன அது இணைமொழி எனப்படும். பல சொற்களில் விளக்க வேண்டிய ஒரு பொருளை ஓரிரு சொற்களில் இலகுவாக விளக்க உதவும்.

இணைமொழிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  • ஒத்த கருத்துள்ள இணைமொழிகள்
        உதாரணம்     = சீரும் சிறப்பும்
                                    = ஏழை எளியவர்

செவ்வாய், 21 ஜனவரி, 2025

தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil

 பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் எனப்படும். உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பாலைவனமாகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் என்பன அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. இருப்பினும் பாலை வனத்தில் காணப்படும் சுனைகளால் பச்சைப் பசேலெனக் காணப்படும் பாலைவனப் பசுந்தரைகள் இப்பாலைவனங்களை அழகுபடுத்துகின்றன. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீர் அருந்துவதற்கு இந்தச் சுனைகள் பெரிதும் உதவுகின்றன.          

பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி 4

9.மலைபடுகடாம்:

வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் பாடிய 583 அடிகள் கொண்ட அகவற்பாட்டு இது. பரிசில் பெற்ற கூத்தன், அது பெறவிரும்பிய இன்னொரு கூத்தனை நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டது. மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால்

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 3

ஆற்றுப்படை நூல்கள்:

புறப்பொருள் பற்றியவற்றுள் 5 ஆற்றுப்படை நூல்கள் ஆகும். அவை பற்றிக் குறிப்புகள் பின்வருமாறு:

6.சிறுபாணாற்றுப் படை:

இது ஓய்மான் நாட்டை ஆண்ட நல்லியக்கோடனைப் புகழ்ந்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய 269 அடிகள் கொண்ட அகவற்பாட்டு. சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின்

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 2

3.பட்டினப்பாலை:
பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைச் செய்யுள் என்பது இப்பெயரின் பொருள். இங்குப் பட்டினம் என்பது புகார் நகர். 301 அடிகள் கொண்ட இதில் வஞ்சியடிகள் கலந்து வருவதால், இதனை வஞ்சிநெடும் பாட்டு என்பர். இதன் தலைவன் திருமாவளவன் என்னும் கரிகால் வளவன் ஆவான். இதனை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியரும் இவரே.

பத்துப்பாட்டு நூல்கள் பகுதி - 1

 பத்துப்பாட்டு நூல்கள் - பகுதி 1:

திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு.
பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றுண்டு. அது வருமாறு:-
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 3

5.பரிபாடல்:

எட்டுத்தொகையில் பரிபாடல் அகமும் புறமும் கலந்ததாகும். இந்நூல் பரிந்து செல்லும் ஓசையை உடையதாக அமைந்தது. பொதுவாகப் பரிபாடல் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் சால்புகளைக் கொண்டு அமைந்து வரும். பரிபாடல் 70 பாடல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் 22 பாக்களே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பாடல்களில் முருகனுக்கும் வைகைக்கும் எட்டுப்பாக்கள் வீதமும் திருமாலுக்கு ஆறு பார்க்களும் என 22 பாக்கள் உள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 2

3. ஐங்குறுநூறு:

எட்டுத்தொகை நூல்களுள் அடிவரையறையில் குறைவான நூல். மூன்று முதல் ஐந்து அடிகளை எல்லையாகக் கொண்டது. திணைக்கு நூறு பாடல் விதம் 500 பாடல்களைக் கொண்டிலங்குகிறது. குறிஞ்சியைக் கபிலரும், முல்லைத்திணையைப் பேயனாரும், மருதத்திணையை ஓரம்போகியாரும், நெய்தல் திணையை அம்மூவனாரும், பாலைத் திணையை ஓதலாந்தையாரும் பாடியுள்ளனர்.

எட்டுத்தொகை நூல்கள் - பகுதி 1

எட்டுத்தொகை இலக்கியம் எட்டு நூல்களை தன்னகத்தே கொண்டது. அவற்றில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்பன அக நூல்கள். பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறநூல்கள், பரிபாடல் அகமும் புறமும் இணைந்த நூலாகும்.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகப்புறமென்று
இத்திறத்த எட்டுத்தொகை”

சனி, 18 ஜனவரி, 2025

உவமைத் தொடர்கள் | அவற்றின் பொருள்கள் | உதாரணங்கள்

 உவமைத்தொடர்

நன்கு தெரிந்த பொருளை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையணியாகும். அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத்தொடர் ஆகும். 

இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன. 

தரம் 5 - தமிழ் பகுதி 2 - மாதிரி வினாக்கள் 3

பின்வரும் பந்தியை வாசிக்க.

            நீங்கள் எனக்கு எம் நாட்டில் இருக்கும் சித்திரக் குன்றமான சீகிரியா பற்றிக் கூறினீர்கள் அல்லவா? காசியப்பன் என்னும் அரசன் தனது பாதுகாப்பிற்காக மறைந்திருந்து வாழ்ந்த போது, அதனை அவன் ஓர் எழில் கொஞ்சும் குன்றாக்கினான் என்றீர்களே. ஆகா! எத்தனை அழகு! எத்தனை வியப்பான காட்சிகள்! நாம் கல்விச் சுற்றுலா சென்ற வேளை அங்கு போயிருந்தோம். தூரத்தில் நின்று பார்த்தபோது ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பது  போலக் காட்சியளித்தது.

வியாழன், 16 ஜனவரி, 2025

உயிர்க்குறிகள்

தமிழ் மொழியிலுள்ள உயிர்க்குறிகள் பற்றி தரம் 4, தரம் 5 மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள  வேண்டும். புலமைப் பரிசில் பரீட்சையில் உயிர்க்குறிகள் பற்றிய வினாக்களும் இடம்பெறுகின்றன. 

இங்கு உயிர்க்குறிகள் தொடர்பான அட்டவணை இற்றைப்படுத்தப்படுகின்றது. 

தமிழ் வளர்ச்சி என்றால் என்ன? - கோரா பதில் தருகிறது.

தமிழ் வளர்ச்சி என்றால் என்ன?

இந்த கேள்வியை இரண்டாக பிரிக்கலாம்.

  1. தமிழ் என்றால் என்ன?
  2. வளர்ச்சி என்றால் என்ன?

தமிழ் என்றால் என்ன?

தமிழ் என்பது ஒரு மொழி, அது அதன் அடித்தளமான தொல்காப்பிய சூத்திரத்தின் வழி இயங்கும். அது தமிழ் மொழியின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு விதி, மறுவுதல், திரிதல் உட்பட அனைத்தையும் பேசுகிறது. அதாவது தமிழ்

அளபெடை என்றால் என்ன? அளபெடை எத்தனை வகைப்படும்?

அளபெடை

​செய்யுளொன்றில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.

அ. உயிரளபெடை

ஆ. ஒற்றளபெடை


1.உயிரளபெடை

திங்கள், 13 ஜனவரி, 2025

ஓரெழுத்து ஒருமொழி பற்றித் தெரிந்துகொள்வோம்


அ - எட்டு, அழகு, சிவன்

ஆ - பசு, ஆன்மா, எருது

இ -  அரை'யின் தமிழ் வடிவம்

ஈ - ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி

உ - சிவன், ஆச்சர்யம், இரண்டு (தமிழ்)

வெள்ளி, 10 ஜனவரி, 2025

மாதிரி வினாப்பத்திரம் க.பொ.த. (சா.த) 2025 PDF

எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. (சா.த) பரீட்சை நடைபெறவுள்ளது. மாணாக்கர் பல்வேறு வினாப்பத்திரங்களையும் தேடியெடுத்து, அவற்றைச் செய்து பார்த்து, தங்களது புள்ளிகளைக் கூட்டிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். இங்கே பகுதி 1, பகுதி 2, பகுதி 3 வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரமொன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கிக் கொள்ளலாம். உங்களது

திங்கள், 6 ஜனவரி, 2025

இலக்கண வினாப்பத்திரம் 1





அடுக்களை என்பது எப்பிரதேசத்திற்குரிய சொல்லாகும்?

அடுக்களை என்பது குறித்ததொரு பிரதேசத்திற்குரிய சொல்லன்று. அடுக்களை தூய தமிழ்ச்சொல்லாகும். மடைப்பள்ளி ( இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம்) , சமையலறை போன்ற பொருள்களையுடைத்தாய் அடுக்களை பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மணிமேகலையில், 'புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது / வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்' என்று வந்துள்ளது. இதற்கு சமையலறை என்று பொருள். 

தற்காலத்தில் அடுக்களை எனும் சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது. (கண்டி - தெல்தோட்டையில் எனது வாப்பும்மா சமையலறையை அடுக்கள (மரூஉ) எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.)

-கலைமகன் பைரூஸ்





வெள்ளி, 3 ஜனவரி, 2025

ஆண்டு நிறைவு விழாக்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்

அன்பு மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

ஆண்டு நிறைவு விழாக்கள் எனும்போது எங்கள் எல்லோருக்கும் வௌ்ளிவிழா, பொன்விழா, வைர விழா, அமுத விழா, நூற்றாண்டு விழா

வியாழன், 2 ஜனவரி, 2025

தொடர்மொழிக்கு ஒருமொழி அறிவோம் 1 PDF இணைக்கப்பட்டுள்ளது

  1. சுதந்திரமற்று வாழ்பவர் - அடிமை
  2. அரண்மனையில் பெண்கள் வசிக்குமிடம் - அந்தப்புரம்
  3. ஒரு நூலுக்கு நூலாசிரியர் தவிர்ந்த பிறரால் வழங்கப்படும் உரை - அணிந்துரை
  4. அகர வரிசையில் சொற்களுக்குப் பொருள் கூறுவது - அகராதி
  5. தாய், தந்தையை இழந்தவன் - அநாதை

தரம் 5 - தமிழ் - பந்தியை வாசித்து விடையளித்தல் - கடந்த கால வினாக்கள்

1. பின்வரும் பந்தியை நன்றாக வாசிக்க. (2012 கடந்த கால வினாத்தாள்)

     நல்ல நண்பன் போல நல்ல புத்தகம் எமக்கு நல்வழி புகட்டும். மாணவப் பருவம் கிடைப்பதற்கு அரியத. அதனால் அப்பருவத்தைப் பிரயோசனம் உள்ளதாகக் கழிக்க வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேடிப்பெற்று அவற்றைக் கருத்தூன்றி வாசித்தல் வேண்டும். 

புதன், 1 ஜனவரி, 2025

'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று கற்பிக்கிறார்கள்.. சரிதானா?

 

ஐயம்

---------

'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று சொல்லித் தந்தார்கள். என்றாலும், எனக்குள் சந்தேகம் எழுகிறது. தௌிவுபடுத்துங்கள்...

தௌிவு

-----------

தமிழ்மொழி பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரித்து நோக்குகின்றது.